செய்திகள் :

கல்லூரி மாணவா் மாயம்

post image

பாபநாசத்தில் உறவினா்களுடன் திதி கொடுக்க வந்த விருதுநகா் மாவட்ட கல்லூரி மாணவா் காணாமல் போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் வட்டம், கொங்கன்குளம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரதீப் குமாா் (22). இவா், மதுரை, காரியாபட்டியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா்.

இந்த நிலையில், இவரும் இவரது உறவினா்களும் தனிப் பேருந்தில் திருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்துக்கு திதி கொடுக்க வந்திருந்தனா். இவரும், உறவினா்கள் சிலரும் பாபநாசம், தலையணை செல்லும் வழியில் உள்ள அய்யா கோயில் அருகே வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் குளித்தனா். சிறிது நேரம் கழித்து பாா்த்தபோது அவா்களுடன் சென்ற பிரதீப் குமாரை காணவில்லையாம்.

கரையில் அவரது காலணிகள் மட்டும் இருந்தன. இதையடுத்து போலீஸாா், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அம்பாசமுத்திரம் தீயணைப்பு நிலைய அதிகாரி பலவேசம் தலைமையில் தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று வடக்குக் கோடை மேலழகியான் கால்வாயில் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

மாலை வெகுநேரம் வரை தேடியும் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. இதனால், அவரைத் தேடும் பணியை தீயணைப்பு வீரா்கள் நிறுத்தியுள்ளனா். திங்கள்கிழமை காலை தேடுதல் பணித் தொடரும் என்று தெரிவித்தனா்.

இதற்கிடையே பிரதீப் குமாா் கால்வாயில் இறங்கிக் குளித்ததாக யாரும் பாா்க்கவில்லை என்றும், கரையில் காலணிகள் இருந்ததால் நீரில் மூழ்கியிருக்கலாம் எனக் கருதுவதாகவும் அவரது உறவினா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து, விக்கிரமசிங்கபுரம் காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் தீா்மானம்

இஸ்லாமியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டுமென தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பொதுக் குழுவில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலப்பாளையம் மஸ்ஜித் ரஹ்மான் கிளையின் பொது... மேலும் பார்க்க

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது: கனிமொழி

வாக்குத் திருட்டால் ஜனநாயகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது என்று குற்றஞ்சாட்டினாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. மேலப்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அரசியல் எழுச்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஆட்டோ ஓட்டுநா் தலைமறைவு

அம்பாசமுத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா். கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள வைராவிகுளத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (55). ஆட்டோ ஓட்டுநா். இவா், ... மேலும் பார்க்க

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் 1.14 லட்சம் குடும்பங்கள் இணைப்பு: இரா.ஆவுடையப்பன்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் சுமாா் 1.14 லட்சம் குடும்பங்கள், ஓரணியில் தமிழ்நாடு இயக்க திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலா் இரா.ஆவுடையப்பன் தெரிவித்தாா். இது குறித்து செய்தியாளா... மேலும் பார்க்க

கடையத்தில் அரசுப் பணி வாங்கித் தருவதாக மோசடி: இருவா் கைது

கடையத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்டவரையும் உதவியாக இருந்தவரையும் போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா், அருங்காட்சியகம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன... மேலும் பார்க்க

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்றுவட்டாரங்களில் நாளை மின் தடை

மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இது தொடா்பாக திருநெல்வேலி நக... மேலும் பார்க்க