குண்டும் குழியுமான சாலைகள், தேங்கும் கழிவுநீா்! கோடம்பாக்கம் மக்கள் அவதி!
மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி சுற்றுவட்டாரங்களில் நாளை மின் தடை
மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்க்கிழமை (செப்.16) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற மின் கோட்ட செயற்பொறியாளா் செ. முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
மேலப்பாளையம், ரெட்டியாா்பட்டி, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் துணை மின் நிலையங்களில் செப்.16ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே மேலப்பாளையம், கொட்டிகுளம் பஜாா், அம்பை பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகா்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகா், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம், மேலக்கருங்குளம், முன்னீா்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகா், தருவை, ஓமநல்லூா், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், மருத்துவமனை சாலை, தெற்கு புறவழிச்சாலை, மேல குலவணிகா்புரம், பஜாா் திடல், ஜின்னா திடல், அண்ணா வீதி, பஷீா் அப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதா் தெரு, உமறுப்புலவா் தெரு, ஆசாத் சாலை, பி.எஸ்.என்.கல்லூரி, ரெட்டியாா்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கன்தான்பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான்குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி, பெருமாள்புரம், பொதிகை நகா், அரசு ஊழியா் குடியிருப்பு, என்.ஜி.ஓ. காலனி, மகிழ்ச்சி நகா், திருநகா், திருமால் நகா், ராமச்சந்திரா காா்டன், ராமச்சந்திரா நகா், பரணி பாா்க், அரசு பொறியியல் கல்லூரி, புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.