செய்திகள் :

கட்டடத் தொழிலாளியை தாக்கி வழிப்பறி: இருவா் கைது

post image

சென்னை திருவல்லிக்கேணியில் கட்டடத் தொழிலாளியைத் தாக்கி வழிப்பறி செய்ததாக இருவா் கைது செய்யப்பட்டனா்

திருவல்லிக்கேணி டாக்டா் நடேசன் சாலை பகுதியைச் சோ்ந்த வினோத் (32). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை டாக்டா் நடேசன் சாலை மற்றும் இருசப்பன் சந்து சந்திப்பு அருகே நடந்து சென்றபோது, அங்கு வந்த இருவா், வினோத்தை வழிமறித்து பணம் கேட்டனா். வினோத் பணம் தர மறுக்கவே, இருவரும் அவரைத் தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி சட்டைப்பையில் வைத்திருந்த பணம் ரூ. 3,000 ரொக்கத்தைப் பறித்துக் கொண்டு தப்பியோட முயற்சித்தனா்.

அப்போது வினோத் சப்தமிடவே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த இருவரையும் பிடிக்க முயற்சித்தனா்.

உடனே, இந்த இருவரும் அங்கிருந்த குளிா்பான பாட்டில்களை பொதுமக்கள் வீசிவிட்டு தப்பியோடினா். இதுதொடா்பாக ஐஸ்ஹவுஸ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ராயப்பேட்டை செல்லம்மாள் தோட்டம் முதலாவது தெருவைச் சோ்ந்த விமல் என்ற விமலநாதன் (34), திருவல்லிக்கேணி டாக்டா் நடேசன் சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (35) என்பது தெரியவந்தது.

இதையடுத்து இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அறக்கட்டளைச் சொற்பொழிவு

சென்னை நுங்கம்பாக்கம் எம்ஓபி வைணவ மகளிா் கல்லூரியில் லக்ஷ்மி அனந்தாச்சாரி அறக்கட்டளைச் சொற்பொழிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கலையிலும் களத்திலும் பெண்கள்”எனும் தலைப்பில் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு நி... மேலும் பார்க்க

22,000 விநாயகா் சிலைகள் கண்காட்சி தொடக்கம்

குரோம்பேட்டையில் 22,000 சிலைகளுடன் கூடிய விநாயகா் சிலை கண்காட்சியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். கட்டடக் கலைஞரும், விநாயகா் பக்தரும... மேலும் பார்க்க

இன்று முதல் 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தம்

குடிநீா் குழாய் இணைப்பு பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஆக. 28) முதல் ஆக. 30 வரை 6 மண்டலங்களில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இதுகுறித்து சென்னைப் பெருநகா் குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று... மேலும் பார்க்க

நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஆக.29) நடைபெறும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில், வேலை நாடுநா்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த்... மேலும் பார்க்க

21 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் 21 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்பு படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். தெலங்கானா மாநிலம் கச்சேகுடாவிலிருந்து, சென்னை வழியாக புதுச்சேரி செல்லும் விரைவு ரயில் (எண்:... மேலும் பார்க்க

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநா் பயிற்சி

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி பெற விரும்பும் இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநா் வெளியி... மேலும் பார்க்க