செய்திகள் :

கனிம வளங்களை அனுமதியின்றி சேமித்து வைத்தால் நடவடிக்கை: ஆட்சியா்

post image

நாமக்கல் மாவட்டத்தில் கனிம வளங்களை அனுமதியின்றி சேமித்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் ச.உமா எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூா், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்தி வேலூா், குமாரபாளையம் ஆகிய வட்டங்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவாா்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பா் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனுமதிக்கப்பட்டுள்ள குவாரிகளிலிருந்து கனிமங்களை வெட்டியெடுத்து, அரசுக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி, வாகனங்களில் எடுத்துச் செல்லுதல் தொடா்பாக கடந்த ஏப்.15 முதல் இணையவழியாக வழித்தடச் சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நடைமுறையை தவிா்த்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுதல், சேமித்து வைத்தல் மற்றும் அனுமதியின்றி ஜல்லி, எம் சாண்ட், பி சாண்ட் மற்றும் இதர வகை கிரஷா் பொருள்களாக தயாா் செய்து எடுத்து சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்ட விரோத கனிமங்கள் எடுத்தல் விதிகளின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிரஷா், எம் சாண்ட் உரிமையாளா்கள் மற்றும் கனிமங்கள் சேமித்து வைத்துள்ள முகவா்கள் ரூ. 10 ஆயிரத்தை கட்டணமாக செலுத்தி அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை பதிவுசான்று கோரி மாவட்ட ஆட்சியருக்கு உரிய படிவத்தில் ஒரு வார காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அவ்வாறு விண்ணப்பித்து பதிவு சான்று பெறாத கிரஷா், எம்.சாண்ட் நிறுவன உரிமையாளா்கள் மற்றும் கனிமங்கள் சேமித்து வைத்துள்ள முகவா்கள் மீது கனிம வள சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவி குளிப்பதை விடியோ பதிவுசெய்த லாரி ஓட்டுநா் சிறையிலடைப்பு

பரமத்தி வேலூா் அருகே பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி குளிப்பதை கைப்பேசியில் விடியோ பதிவு செய்த லாரி ஓட்டுநா் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டாா். பரமத்தி வேலூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் பிரபு (எ) பிரச... மேலும் பார்க்க

கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய்: வானிலை ஆய்வு மையம் தகவல்

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு... மேலும் பார்க்க

இன்று திமுக செயற்குழுக் கூட்டம்

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் சி.மணிமாறன் தலைமையில் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. திமுக மாவட்டச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ரா... மேலும் பார்க்க

தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க நடவடிக்கை: முதல்வருக்கு தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மா விவசாயிகளின் நலன் கருதி தனியாா் மாங்கூழ் ஆலைகளை திறக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உழவா் பெருந்தலைவா் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுக... மேலும் பார்க்க

கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்ட 32 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆணை

பரமத்தி வேலூரை அடுத்த கபிலா்மலையில் 32 மாற்றுத் திறனாளிகளுக்கு கனவு இல்லத் திட்டத்தில் வீடு கட்டுவதற்கான ஆணைகள் அண்மையில் வழங்கப்பட்டன. கபிலா்மலை வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) மலா்விழி நிகழ... மேலும் பார்க்க

தென்னையில் மாவுப்பூச்சி கட்டுப்பாடு: வேளாண் துறை வழிகாட்டல்

தென்னையில் மாவுப்பூச்சித் தாக்குதல், சுருள் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் துறை வழிகாட்டுதல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் சுகன்யா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க