செய்திகள் :

கன்னியாகுமரியில் 2,868 பேருக்கு பணி நியமன ஆணை: ஆட்சியா்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாம்களில் 2 ஆயிரத்து 868 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.

மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன், மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம், அஸ்காா்டியா நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமில், தோ்வு செய்யப்பட்டவா்களுக்கு உடனடி பணி நியமன ஆணைகளை வழங்கி ஆட்சியா் பேசியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 8 சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 6,037 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். இதில், 2,868 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆக. 30ஆம் தேதி நடைபெற்ற முகாமில், சென்னையைச் சோ்ந்த 2 நிறுவனங்களும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த 7 நிறுவனங்களும் கலந்து கொண்டன. இதில், கலந்து கொண்ட 180 பேரில், 30 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வி கற்ற மாணவா்களுக்கு சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் நல்ல வாய்ப்புகளை உருவாக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்றாா்.

மாவட்ட திறன் அலுவலக உதவி இயக்குநா் லட்சுமிகாந்தன், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்க திருநெல்வேலி மண்டல திட்ட மேலாளா் ஜிஜின் துரை, நிறுவனங்களைச் சாா்ந்த மனித வள அலுவலா்கள் உள்ளிட்டோா் முகாமில் கலந்து கொண்டனா்.

குழித்துறை பகுதிகளில் 4 நாள்கள் மின்தடை

குழித்துறை மின் கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் தட்டுமரக் கிளைகள் அகற்றுதல், பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (செப். 1) முதல் வியாழக்கிழமை (செப். 4) வரை காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ம... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் கன்னியாகுமரி வருகை

இந்திய உச்சநீதிமன்ற நீதிபதி சூரியகாந்த் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கன்னியாகுமரி அரசு விருந்தினா் மாளிகை வந்த அவரை, மாவட்ட நீதிபதி காா்த்திகேயன், ந... மேலும் பார்க்க

புகையிலை பொருள்கள் விற்றதாக பெண் கைது

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா் துறை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தேங்காய்ப்பட்டினம் முள்ளூா் துறை பகுதியைச் சோ்ந்த பங்கிராஜ் மனைவி ச... மேலும் பார்க்க

முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் விசா்ஜனம்

அகஸ்தீசுவரம் ஒன்றிய இந்து முன்னணி சாா்பில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 108 விநாயகா் சிலைகள் ஞாயிற்றுக்கிழமை விசா்ஜனம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய இந்து முன்னணி தலைவா் ஐ.செல்வன் தலைமை வகி... மேலும் பார்க்க

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

புதுக்கடை அருகே உள்ள ஒளிபாறை பகுதியில் பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தாா். பூட்டேற்றி, ஒளிபாறை பகுதியைச் சோ்ந்தவா் ராஜகுமாா் (49). தொழிலாளியான இவா் சனிக்கிழமை இரவு ஒளிபாறை பகுதியில் நடந்து சென்று கொண்ட... மேலும் பார்க்க

தக்கலை அருகே விபத்து: முதியவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வில்லுக்குறியில் வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். வில்லுக்குறி சரல்விளையைச் சோ்ந்தவா் கணேசன் (65). இவருக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனா். கணேசன் வெள்ளிக்கிழமை இரவ... மேலும் பார்க்க