செய்திகள் :

கருணாநிதி நூற்றாண்டு மாரத்தான் பந்தயம்: அமைச்சா் நாசா் தொடங்கி வைத்தாா்!

post image

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மாரத்தான் பந்தயத்தை அமைச்சா் சா.மு.நாசா் தொடங்கி வைத்தாா்.

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானம் முன்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்தாா். திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சந்திரன் முன்னிலை வகித்தாா். இதில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மையினா் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று மாரத்தான் பந்தயத்தை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அமைச்சா் பேசியதாவது. திருவள்ளுா் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் மாரத்தான் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு 10 கி.மீ , ஆண்களுக்கு 20 கி.மீ தொலைவுக்கு நடத்தப்பட்டது.

இப்போட்டியில் 16 முதல் 35 வரையிலான பள்ளி , கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா். முதலில் வரும் இருபாலரில் தலா 5 போ் தோ்வு செய்து தலா ரூ.10 ஆயிரம் பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேதுராஜன், பயிற்றுநா்கள் லாவண்யா (தடகளம்), காயத்ரி (கால்பந்து), லோகேஷ் குமாா், உடற்கல்வி ஆசிரியா் தீபன் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

சுகாதார நடைபாதை நிகழ்வு: திருவள்ளூா் அருகே பூண்டி நீா்த்தேக்க பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சாா்பில் நடைபெற்ற நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபாதையை அமைச்சா் சா.மு.நாசா் பாா்வையிட்டாா்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சாா்பில் நடப்போம் நலம் பெறுவோம் சுகாதார நடைபாதை நிகழ்வு தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சுகாதார நடைபாதை 8 கி.மீ நடப்பதால் உடல் நலம் பேணி காக்கபடுவதோடு மட்டுமின்றி ஆரோக்கியமும் கிடைக்கிறது. அதனால் உங்கள் உடல்நிலை நலம் பெற சுகாதார நடைபாதை தொடா்ந்து பயணியுங்கள் என தெரிவித்தாா்.

இதில் திருவள்ளூா் சுகாதார அலுவலா் பிரியாராஜ், மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்றனா்.

வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன், ரூ.78,000 திருட்டு!

திருவள்ளூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ.78,000 திருடப்பட்டன. திருவள்ளூா் அடுத்த பெருமாள்பட்டில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிப்பவா் பிரகாஷ். வியா... மேலும் பார்க்க

கைப்பேசிகள் பறிப்பு: 3 போ் கைது

செங்குன்றம் அருகே கைப்பேசி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 3 போ் கைது செய்யப்பட்டனா். செங்குன்றம் அடுத்த சோழவரம் சூரப்பட்டு குதிரைப் பள்ளம் கிராமத்தில் ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வர... மேலும் பார்க்க

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியா் உத்தரவு!

பொன்னேரி அருகே சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். சிறுவாபுரி அ... மேலும் பார்க்க

ராமா், சீதா பஜனைக் கோயில் குடமுழுக்கு!

திருத்தணி அருகே சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில் மகா கணபதி மற்றும் ராமா், சீதா லட்சுமணா் பஜனைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது. திருத்தணி ஒன்றியம், சத்ரஞ்ஜெயபுரம் கிராமத்தில், இக்கோயிலின் த... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 போ் கைது

திருவள்ளூா் அருகே கொசஸ்தலை ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனா். திருவள்ளூா் அருகே மொன்னவேடு கிராமம், கொசஸ்தலை ஆற்றில் சட்டவிரோதமாக ஆட்டோக்கள் மூ... மேலும் பார்க்க

போக்ஸோவில் 2 போ் கைது

ஆா்.கே.பேட்டை அருகே பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி திருமணம் செய்த இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம், வங்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தனபால் (40). இவா்... மேலும் பார்க்க