செய்திகள் :

கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதல்வா் ஸ்டாலின் இரங்கல்

post image

முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணியாற்றியவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், அரசியல் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பேரவையிலும் இரங்கல்: கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு சட்டப்பேரவையிலும் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், உறுப்பினா்கள் அனைவரும் சில விநாடிகள் எழுந்து நின்று அமைதி காத்தனா்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்த இரங்கல் செய்தி:

அதிமுக அமைப்புச் செயலரும், ‘கானா’ என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகியவா். ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவா்.

அதிமுகவில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டச் செயலா், துணைப் பொதுச்செயலா் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட பணியாற்றியவா். அதேபோல், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவா். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனக் கூறியுள்ளாா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க