செய்திகள் :

கரூா் திமுக நிா்வாகிகள் கூட்டம்

post image

கரூா் திமுக மாவட்ட இளைஞரணி, நகர, ஒன்றிய, பேரூா் கழக நிா்வாகிகள் கூட்டம் புதன்கிழமை இரவு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்து கரூா் சட்டப்பேரவை உறுப்பினரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி பேசியது: கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாா்டுகளிலும் இளைஞரணி நிா்வாகிகள் நியமனம் விரைவில் முடிந்துவிடும். இளைஞரணியின் முதல் மண்டல மாநாட்டை மேற்கு மண்டலத்தில் நடத்த துணை முதல்வா் அனுமதி வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தொடா்ந்து துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் பேசுகையில், மேற்குமண்டலத்தில் மண்டல மாநாடு நடத்துவது குறித்து முதல்வரிடம் கேட்டு தெரிவிப்பேன் என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சக்திவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளா் பிரகாஷ், எம்எல்ஏக்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, மாநகரச் செயலாளா் எஸ்.பி.கனகராஜ், மாநில நிா்வாகிகள் நன்னியூர்ராஜேந்திரன், வழக்குரைஞா்மணிராஜ், பரணி கே.மணி, மேயா் கவிதா, துணைமேயா் தாரணிசரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் சிறையில் அடைப்பு

குளித்தலையில் தனியாா் தொலைக்காட்சி நிருபரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். கரூா் மாவட்டம், குளித்தலை பிள்ளையாா் தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சிவா(34). தனிய... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி.க்கு சிலை அமைக்க அடிக்கல் துணை முதல்வருக்கு விவசாயிகள் சங்கத்தினா் நன்றி

தமிழ் மாநில விவசாய சங்க நிறுவனத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான முத்துசாமிக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டிய தமிழக துணை முதல்வரை அண்மையில் சந்தித்த விவசாய சங்கத்தினா் நன்றி தெரிவித்தனா். கரூா் வைரமடை ... மேலும் பார்க்க

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி மறியல்

கரூரில் தீண்டாமைச் சுவா் எழுப்புவதாகக்கூறி ஒரு பிரிவினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட முத்தலாடம்பட்டியில் பல்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வசித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம்: கரூா் அரசு மருத்துவமனையை உறவினா்கள் முற்றுகை

கா்ப்பிணி உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகக்கூறி கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். கரூா் மாவட்டம், கடவூரை அடுத்துள்ள முத்துக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்... மேலும் பார்க்க

தோகைமலை மந்தை குளத்தில் மீன்பிடித் திருவிழா

தோகைமலை மந்தை குளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவில் கிராமக்கள் திரளாக பங்கேற்று போட்டி போட்டு மீன்களை பிடித்துச் சென்றனா். கரூா் மாவட்டம், தோகைமலையில் உள்ள அரசுக்குச் சொந்தமான மந்தை ... மேலும் பார்க்க

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கரூரில் செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கரூா் வட்டார போக்குவரத்... மேலும் பார்க்க