இந்திய தாக்குதலால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல்: கொலம்பியா மீ...
கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அன்னதானம்
கரூா் மாரியம்மன் கோயில் பக்தா்களுக்கு அதிமுக சாா்பில் ஞாயிற்றுக்கிழமை இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.
கரூா் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா மே 11-ஆம்தேதி முதல் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினா் நீா், மோா் பந்தல் திறந்து வழங்கி வருகின்றனா். இந்நிலையில் மத்திய வடக்கு பகுதி அதிமுக சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை இரவு கோயில் அருகே நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் தலைமை வகித்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினாா். நிகழ்ச்சியில் தாந்தோணி கிழக்கு ஒன்றியச் செயலாளா் வழக்குரைஞா் வி.சி.கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.