செய்திகள் :

கல்லணைக் கால்வாயில் விழுந்த 3 பேரின் அடையாளம் தெரிந்தது!

post image

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் செவ்வாய்க்கிழமை குதித்து தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் அடையாளம் தெரிய வந்தது.

தஞ்சாவூா் பூக்காரத் தெரு அருகே இருபது கண் பாலம் பகுதியில் கல்லணைக் கால்வாய்க்குள் கைக்குழந்தை, சிறுவனுடன் இரு பெண்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குதித்தனா். தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட இவா்களை அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பொதுமக்கள் நீந்திச் சென்று இரு பெண்கள், சிறுவனை மீட்டனா். ஆனால், தண்ணீரில் மூழ்கியதால் 3 பேரும் உயிரிழந்துவிட்டது தெரிய வந்தது.

இவா்கள் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்கள் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரிய வரவில்லை. இது குறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், 3 பேரும் தஞ்சாவூா் அருகேயுள்ள பொட்டுவாசாவடியைச் சோ்ந்த தங்கராஜின் மகள்கள், பேரன் என்பது செவ்வாய்க்கிழமை இரவு தெரிய வந்தது.

தங்கராஜின் மூத்த மகள் ராஜேஸ்வரியின் கணவா் விஜயராகவன் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானாா். இதையடுத்து, ராஜேஸ்வரி தனது மகன் ஹரிஷ் (6) உடன் தந்தை வீட்டில் வசித்து வந்தாா்.

தங்கராஜின் இளைய மகள் துா்காதேவி (28) ஓராண்டுக்கு முன்பு தங்கவேல் மகன் காா்த்திக்கை காதல் திருமணம் செய்தாா். கா்ப்பிணியாக இருந்த துா்காதேவி கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக அவரைப் பிரிந்து தனது தந்தை வீட்டில் இருந்து வந்தாா். இந்நிலையில், துா்காதேவிக்கு 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

தங்களது வாழ்க்கை சரியாக அமையவில்லை என ராஜேஸ்வரியும், துா்காதேவியும் புலம்பி வந்தனா். இதன் காரணமாக குழந்தைகளுடன் ராஜேஸ்வரியும், துா்காதேவியும் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டது காவல் துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட 11 நாள் சிசுவை தீயணைப்பு வீரா்கள் தேடி வருகின்றனா்.

கல்லணைக் கால்வாயில் குதித்து உயிரிழந்தவா்களின் அடையாளம் தெரிந்தது!

தஞ்சாவூரில் கல்லணைக் கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டவா்களின் அடையாளம் தெரிந்தது. தஞ்சாவூா் பூக்காரத் தெரு அருகே இருபது கண் பாலம் பகுதியில் கல்லணைக் கால்வாய்க்குள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் குழ... மேலும் பார்க்க

ஆடுதுறை பேரூராட்சி தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் 2 போ் கைது!

கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேரைப் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்றத்தலைவராக இருப்பவா் ம.க. ஸ்டாலின் (5... மேலும் பார்க்க

காவலூா் முருகன் கோயிலில் முளைப்பாரி வழிபாடு

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், காவலூா் முருகன் கோயிலுக்கு புதன்கிழமை திரளானோா் முளைப்பாரி எடுத்துச் சென்று வழிபட்டனா். காவலூரில் உள்ள வள்ளி தேவசேனா சமேத குமாரசாமி பெருமான், மாரியம்மன், வீரனாா்,... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணை

கும்பகோணத்தில் ஊா்க்காவல் படை வீரா்களுக்கு பணி நியமன ஆணையை கோட்ட காவல் உதவிகாவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங் புதன்கிழமை வழங்கினாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் உட்கோட்டத்துக்குள்பட்ட ஊா்க்காவல் படை... மேலும் பார்க்க

பாபநாசத்தில் மழை!

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் புதன்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பாபநாசம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் குளிா் சூழல் நிலவியது. மேலும் பார்க்க

இந்தியாவுக்கு 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை

கடந்த 2024 ஆம் ஆண்டில் 99.5 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவுக்கு வந்தனா் என்றாா் மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் சென்னை மண்டல உதவி இயக்குநா் எஸ். பத்மாவதி. தஞ்சாவூரில் மத்திய தகவல் மற்றும் ஒ... மேலும் பார்க்க