``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க கண்காணிப்புக் குழு
ஒவ்வொரு கல்லூரியிலும் பகடிவதை (ராகிங்) கொடுமையைத் தடுக்கக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா் கோவி. செழியன்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் தஞ்சாவூருக்கு வரும் தமிழக முதல்வரை வரவேற்கும் விதமாக வியாழக்கிழமை ராட்சத பலூனை பறக்கவிட்ட அமைச்சா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
ஒவ்வொரு கல்லூரியிலும் பகடிவதை (ராகிங்) கொடுமையைத் தடுக்கக் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், கல்லூரி முதல்வா், துறைத் தலைவா்கள், மாணவா் பிரதிநிதிகள், பெற்றோா் சங்க பிரதிநிதிகள் என ஐவா் அல்லது 7 போ் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவினா் மாணவா்கள் கல்லூரிக்கு வருவது முதல் கல்லூரி முடிந்து வீட்டுக்குச் செல்வது வரை கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கின்றனா். எனவே பள்ளி, கல்லூரிகளில் பகடிவதை (ராகிங்) குற்றம் நடைபெறாமல் தடுக்க முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது.
மேட்டூா் அணை திறக்கப்பட்டுள்ளதால், டெல்டா மாவட்டங்களில் விதை நெல், இடுபொருள்கள் மானிய விலையில் தட்டுப்பாடின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை மாதமாக ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் தூா் வாரப்பட்டதால், கடைமடை வரை தண்ணீா் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படுவதற்கான தேதியை அரசு அறிவிக்கும்.
கடந்த 4, 5 ஆண்டுகளில் பட்டயப்படிப்பில் தோ்வு எழுத முடியாமல் விடுபட்ட மாணவா்களும் தொடா்ந்து படிக்கும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இடைநிற்றல் என்பது தொழிற்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக்கிலும் இருக்கக் கூடாது, இடைநிற்றல் இல்லாத தொழிற்கல்வி இருக்க வேண்டும் எனவும் முதல்வா் அறிவுறுத்திவுள்ளாா். அதன் அடிப்படையில் ஆயிரக்கணக்கான மாணவா்கள் மறுதோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். இதன்மூலம் இடைநிற்றல் இல்லா உயா்கல்வி என்ற நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.