செய்திகள் :

``கல்லூரிக்குச் சென்றால் கேலி, கிண்டல்..'' - டயட் இருந்த மாணவர் மரணம்; கண்களை தானம் செய்த பெற்றோர்

post image

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்னட்டிவிளை பகுதியைச் சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் சக்தீஷ்வர் (17). 12-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்காக காத்திருந்தார்.

இந்த நிலையில், அவருக்கு நேற்று திடீரென மூச்சுத்திணறல்  ஏற்பட்டு மயங்கி கீழே சரிந்தார். பெற்றோர் உடனடியாக குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலின்பேரில், குளச்சல் போலீஸார் அங்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சக்தீஷ்வரின் பெற்றோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் அவர் யூடியூப் பார்த்து டயட் மேற்கொண்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "12-ம் வகுப்பு படித்து முடித்த சக்தீஷ்வர் உடல் எடை அதிகரித்திருப்பதாக கூறிவந்திருக்கிறார். கல்லூரிக்குச் செல்லும்போது உடல் பருமனாக இருந்தால் சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக நேரிடலாம் எனக்கூறி உடல் எடையை குறைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

அதற்காக யூடியூப் பார்த்து டயட் கண்ட்ரோலை கடைபிடித்து வந்திருக்கிறார். அதன்படி, கடந்த மூன்று மாதங்களாக பழங்கள், பழச்சாறு போன்றவற்றை அருந்தி உடற்பயிற்சி செய்து வந்திருக்கிறார். தொடர்ந்து பழச்சாறு குடித்து வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு வந்த சக்தீஷ்வர் திடீரென மூச்சு திணறி மயங்கியுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்து விட்டதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

மரணமடைந்த மாணவர் சக்தீஷ்வர்

உடல் பருமனை குறைக்க முறையாக அங்கீகாரம் பெற்ற சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையை பெற வேண்டும் எனவும். முழு உடல் பரிசோதனைக்கு பின் அவர்களின் பரிந்துரை அடிப்படையில் உடல் பயிற்சி மற்றும் டயட் கண்ட்ரோல் மேற்கொண்டால் இதுபோன்ற உயிரிழப்புகளை தவிர்க்கலாம் என்றும் போலீஸார் அறிவுறுத்தினர்.

இதற்கிடையே மரணமடைந்த சிறுவன் சக்தீஷ்வரின் கண்களை தானமாக வழங்க பெற்றோர் முன்வந்தனர். இதையடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் பெரில் தலைமையிலான மருத்துவர்கள் சக்தீஷ்வரின் கண்களை தானமாக பெற்றுக்கொண்டனர்.

கோவை: `திருமணம் தாண்டிய உறவுக்கு தடை' - 4 வயது மகளை கொலை செய்த பெண் கைது

கோவை இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழரசி (30). இவர் கட்டுமானப் பணியில் சித்தாளாக பணியாற்றி வருகிறார். தமிழரசிக்கும், ரகுபதி (35) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த ... மேலும் பார்க்க

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க