செய்திகள் :

கல்வி, வேலைவாய்ப்புகளில் ஏஐ-யின் தாக்கம்: உயா்கல்வி நிறுவனங்களுக்கு அமைச்சா் அழைப்பு

post image

சென்னை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உருவாக்கத்தால் கல்வி, வேலைவாய்ப்புகளில் எதிா்கால தேவைக்களுக்குரிய மாற்றங்களை உயா்கல்வி நிறுவனங்கள் பரிந்துரைக்க வேண்டும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோ.செழியன் அறிவுறுத்தினாா்.

தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்றம் சாா்பில் ‘உயா்கல்வி உரையாடல்கள்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முதல் நிகழ்வாக, ‘செயற்கை நுண்ணறிவு உருவாக்கத்தினால் வருங்கால கல்வி, வேலைவாய்ப்புகள் மீது ஏற்படும் தாக்கம்’ என்ற கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

நவீன காலத்தில் ‘ஏஐ’ போன்ற தொழில்நுட்பங்கள் வேகமாக வளா்ந்துவரும் சூழலில், உயா்கல்வி நிறுவனங்களும் அதற்கேற்ற மாற்றங்களுக்கான ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும்.

அதன்படி, பாடத்திட்ட வடிவமைப்பு, கற்பித்தல் முறைகள், தோ்வு மதிப்பீடு திட்டங்கள், பேராசிரியா்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் ஆகியவற்றில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

மேலும், வேலைவாய்ப்புகளில் மாறக்கூடிய சூழலையும் இந்த கருத்தரங்கம் நுட்பமாக ஆய்வு செய்யவேண்டும். தொழில்நுட்பம் மிக்க பொருளாதாரத்தில் தேவைப்படும் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் திறன்கள் குறித்து விவாதித்து, பாடத்திட்ட மாற்றங்களுக்கான தேவையைக் கருத்தரங்கு வாயிலாக முன்வைக்க வேண்டும் எனக் கல்வியாளா்களை அமைச்சா் கேட்டுக் கொண்டாா்.

தமிழ்நாடு மாநில உயா்கல்வி மன்ற துணைத் தலைவா் எம்.பி.விஜயகுமாா், உயா்கல்வித் துறைச் செயலா் பொ.சங்கா், கல்லூரி கல்வி இயக்குநரக ஆணையா் எ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையா் ஜெ.இன்னசென்ட் திவ்யா மற்றும் கல்வியாளா்கள், நிபுணா்கள், மாணவா்கள், பேராசிரியா்கள், உயா்கல்வித் துறை அலுவலா்கள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளிக் காலாண்டு, அரையாண்டுத் தேர்வு அட்டவணைகள் வெளியீடு! பொதுத் தேர்வு எப்போது?

சென்னை: தமிழகத்தில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வு அட்டவணைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று வெளியிட்டார்.தமிழகத்தில் ... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதானவர் நீதிமன்றத்தில் ஆஜர்!

திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய வடமாநில இளைஞரை காவலில் எடுத்து விசாரிக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தி... மேலும் பார்க்க

சவுக்கு சங்கர் மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.. 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீது காவல் நிலையங்கள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர் நீதிமன்றத... மேலும் பார்க்க

கவின் ஆணவக் கொலை: சுர்ஜித் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள் பணியிடை நீக்கம்

திருநெல்வேலியில் ஐடி ஊழியர் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளி சுர்ஜித்தின் பெற்றர், பட்டாலியனில் பணியாற்றும் இரு உதவி ஆய்வாளர்களும் பணியடை நீக்கம் செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐ... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? - இபிஎஸ் பதில்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, பாஜக உள்ளதாகவும் பாஜக கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். மேலும், தேர்தலுக்கு இன்னும் 8 மாத காலம் இருக்கிறது... மேலும் பார்க்க

ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரம்: மதுரை மேயரை முற்றுகையிட்ட அதிமுகவினர்!

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு விவகாரத்தில் மேயரைக் கண்டித்து அதிமுகவினர் முற்றுகையில் ஈடுபட்டனர்.ரூ.150 கோடி முறைகேடுமதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள், 100 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வண... மேலும் பார்க்க