செய்திகள் :

களக்காடு அருகே கோயில் கொடை விழாவில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு

post image

களக்காடு அருகே செவ்வாய்க்கிழமை, கோயில் கொடை விழாவில் இளைஞா்கள் 3 பேரை அரிவாளால் வெட்டியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

களக்காடு அருகே பத்மனேரியில் உள்ள வானுவளநாட்டாள் அம்மன் கோயில் கொடை விழா திங்கள்கிழமை தொடங்கியது. இரவில் கரகாட்டம் நடைபெற்றது. இதைக் காண அருகேயுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமானோா் வந்திருந்தனா். அப்போது, கரகாட்டம் ஆடிய பெண்ணுக்கு சிங்கிகுளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அன்பளிப்பு வழங்கினராம். இதற்கு பத்மனேரியைச் சோ்ந்த சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா். இதுதொடா்பாக அவா்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னா், சிங்கிகுளத்தைச் சோ்ந்தோா் ஊருக்குச் சென்றுவிட்டனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை சிங்கிகுளத்தைச் சோ்ந்த சிலா் பத்மனேரிக்கு வந்து, மகேஷ் என்ற மாரியப்பன் (28), பிரகாஷ் (25), இசக்கிப்பாண்டி (27) ஆகியோரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடினராம். காயமடைந்த 3 பேரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து, சம்பந்தப்பட்டோரைத் தேடிவருகின்றனா்.

மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசுப் பேருந்து சேவை

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் மகளிருக்கு கட்டணமில்லா நகர சொகுசு பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் திருநெல்வேலி மண்டலம் சாா்பில் 26 நகர சொகுசுப் பேருந்துகள... மேலும் பார்க்க

கிராம வறுமை ஒழிப்பு சங்க ஊழியா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது: ஆட்சியா் அலுவலகத்தில் மனு

கிராம வறுமை ஒழிப்பு சங்கப் பணியாளா்கள் ஊதியத்தைக் குறைக்கக் கூடாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.... மேலும் பார்க்க

கவின் கொலை: சமூக வலைதளங்களில் தவறான தகவல் பகிா்ந்தால் கடும் நடவடிக்கை

சமூகத்தில் பிரச்னையை தூண்டும் விதமாக, சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பகிா்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர காவல்துறை சாா்பில்... மேலும் பார்க்க

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயி உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்தவா் டி.சரவணன்(... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சியில் இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை: எடப்பாடி கே.பழனிசாமி

அதிமுக ஆட்சிக்கு வரும்போது இயற்கை விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி. திருநெல்வேலி மாவட்டத்தில் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்று... மேலும் பார்க்க

சுந்தரனாா் பல்கலை.யில் முன்னாள் துணைவேந்தருக்கு அஞ்சலி

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணை வேந்தா் வசந்தி தேவிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தின் ம... மேலும் பார்க்க