செய்திகள் :

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக் வர்மா!

post image

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் திலக் வர்மா விளையாடவுள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியங்களால் கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இந்த தொடரில் விளையாடுவதற்காக அண்மையில் இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ருதுராஜ் கெய்க்வாட் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இதையும் படிக்க: ஆஸி. பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் எங்களிடம் திட்டங்கள் உள்ளன: ககிசோ ரபாடா

இந்த நிலையில், கவுன்ட்டி சாம்பியன்ஷிப் தொடரில் ஹேம்ப்ஷைர் அணிக்காக இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான திலக் வர்மா விளையாடவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

22 வயதாகும் ஹைதராபாதைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான திலக் வர்மா, இதுவரை இந்திய அணிக்காக 25 டி20 போட்டிகள் மற்றும் 4 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் 749 ரன்கள் மற்றும் 68 ரன்கள் முறையே எடுத்துள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடி வருகிறார்.

கவுன்ட்டி சாம்பியன்ஷிப்பில் திலக் வர்மா விளையாடவுள்ளது குறித்து ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்ததாவது: ஹைதராபாதைச் சேர்ந்த சர்வதேச வீரரான என். தாக்குர் திலக் வர்மா ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்கு விளையாடுவதற்காக அந்த அணி நிர்வாகத்தால் அணுகப்பட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஹேம்ப்ஷைர் கவுன்ட்டி அணிக்காக அவர் சிறப்பாக விளையாட எங்களது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தொடர்ச்சியாக 2-வது முறை சாம்பியன் பட்டம் வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்துள்ளது: மிட்செல் ஸ்டார்க்

18 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா 1,204 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 50.16 ஆகவும், அதிகபட்ச ஸ்கோர் 121 ஆகவும் உள்ளது. முதல் தர போட்டிகளில் அவர் 5 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள்: 138 ரன்களுக்கு சுருண்ட தென்னாப்பிரிக்கா!

ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ் அசத்தல் பந்துவீச்சால் தெ.ஆ. அணி 138 ரன்களுக்கு சுருண்டது.லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 121க்கு ஆல் அவுட் ஆக, முதல் நாள் முடி... மேலும் பார்க்க

பிஜிடி தொடரின் தோல்விக்குப் பின் கோலியை கேப்டனாக்கி இருப்பேன்: ரவி சாஸ்திரி

விராட் கோலியின் ஓய்வு சரியாக கையாளப்பட்டிருக்க வேண்டுமென ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.ஆஸ்திரேலியாவுடனான பிஜிடி தொடரின் தோல்விக்குப் பிறகு விராட் கோலி தனது ஓய்வை அறிவித்தார். அதாவது, கடந்த மாதம் ஐபிஎல் போ... மேலும் பார்க்க

2-ஆம் நாள் உணவு இடைவேளை: பெடிங்ஹாமின் நிதான ஆட்டத்தால் தெ.ஆ. எழுச்சி!

டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் 2ஆம் நாளின் உணவு இடைவேளை வரை தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களை எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்றுவரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்... மேலும் பார்க்க

குழந்தைகளுடன் சேர்ந்து லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய ஏபிடி வில்லியர்ஸ்..!

ஏபிடி வில்லியர்ஸ் தனது குழந்தைகளுடன் மார்னஸ் லபுஷேனிடம் கையெழுத்து வாங்கிய விடியோ வைரலாகியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியைப் பார்க்க பல முன்னாள்... மேலும் பார்க்க

ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “நான் ஏன் ஆர்சிபி அணியை வாங்கப் போகிறேன். நான் என்ன பைத்தியக்காரனா?” எனக் கூறியுள்ளார். ஐபிஎல் தொடங்கிய 18 ஆண்டுகளில் ஆர்சிபி இந்தாண்டு முதல்முறையாக கோப்பையை வெ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி: முதல் இன்னிங்ஸில் கற்றுக்கொண்ட பாடம் என்ன? ஸ்டீவ் ஸ்மித் பதில்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் தான் கற்றுக்கொண்ட பாடம் குறித்து பேசியுள்ளார். டபிள்யூடிசி இறுதிப் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் ஆஸி. 212-க்கு ஆல... மேலும் பார்க்க