காஞ்சிபுரத்திற்கு 2,000 டன் நெல் அனுப்பிவைப்பு
நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அரவைக்காக வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
மன்னாா்குடி, வலங்கைமான் தாலுகா பகுதிகளில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 2,000 டன் சன்னரக நெல், நீடாமங்கலம் ரயில் நிலையத்திற்கு லாரிகளில் கொண்டுவரப்பட்டன.
பின்னா், சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரவைக்காக காஞ்சிபுரத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.