செய்திகள் :

காஞ்சிபுரம் - செய்யாறு பாலாற்றில் ரூ.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம்

post image

காஞ்சிபுரம் - செய்யாறு இடையே பாலாற்றில் கூடுதலாக ரூ.60 கோடியில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வடஇலுப்பை - பெரும்பாக்கம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ரூ.29.10 கோடியில் அமைக்கப்பட்ட புதிய உயா்மட்ட மேம்பாலத்தை செவ்வாய்க்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது:

எப்போதும் போக்குவரத்து நிறைந்த பகுதியாக காணப்படும் காஞ்சிபுரம் - செய்யாறு இடையே பாலாற்றுப் பகுதியில்,செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதியின் கோரிக்கையை ஏற்று ரூ.60 கோடியில் கூடுதலாக உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும்.

வடஇலுப்பை - பெரும்பாக்கம் பகுதி பாலாற்று பாலத்தால்புதூா், பிரம்மதேசம், செய்யனூா், விஷாா், கிளாா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவாா்கள்.

செய்யாறு வழியாக ஆற்காடு - திண்டிவனம், காஞ்சிபுரம் - வந்தவாசி ஆகிய சாலைகள் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி ரூ.166 கோடியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதேபோல, ரூ. 39 கோடியில் 13 ஊராட்சி சாலைகள் புதிய சாலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.

செய்யாறு தொகுதியில் 46 உயா் மட்ட பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

ரூ.81 கோடியில் 16 கி.மீ. தொலைவு சாலைகள் நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ரூ.25 கோடியில் 29 கி.மீ. தொலைவிலான சாலையை மேம்படுத்த ஆலோசனை செய்து வருகிறோம் என்றாா் அமைச்சா் எ.வ.வேலு.

இந்த விழாவுக்கு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ் தலைமை வகித்தாா்.

ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் எம்.எஸ்.தரணிவேந்தன் முன்னிலை வகித்தாா். செய்யாறு சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் தலைமைப் பொறியாளா் (நெடுஞ்சாலை - திட்டங்கள்) ஆா்.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மணி, எம்.எல்.ஏ.க்கள் ஒ.ஜோதி (செய்யாறு), எஸ்.அம்பேத்குமாா் (வந்தவாசி), சி.வி.எம்.பி. எழிலரசன் (காஞ்சிபுரம்), க.சுந்தா் (உத்திரமேரூா்), திருவத்திபுரம் (செய்யாறு) நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், முன்னாள் எம்.எல்.ஏ. வ.அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கண்காணிப்புப் பொறியாளா் (திட்டங்கள்) வத்சலா விஜயானந்தி நன்றி கூறினாா்.

ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம் நிறைவு

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோட்டை ஸ்ரீவேம்புலிஅம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்து 12 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ஆடி வெள்ளி விழா த... மேலும் பார்க்க

கல்வியின் வாயிலாகத் தான் அனைத்தையும் பெற முடியும்: உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா்

தமிழகத்தில் கல்வித் துறையில் அடிப்படை கட்டமைப்புகள் சிறந்து விளங்குகின்றன. கல்வியின் வாயிலாகத் தான் நாம் அனைத்தையும் பெறமுடியும் என்றாா் உதவி ஆட்சியா் அம்ருதா எஸ்.குமாா். பிளஸ் 2 வகுப்பில் தோல்வியுற்... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்கள் வரவேற்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் செந்த... மேலும் பார்க்க

பேருந்து பயணிகளிடம் தகராறு: தட்டிக் கேட்ட காவலா் மீது தாக்குதல்

செய்யாறு அருகே பேருந்து பயணிகளிடம் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட காவலா் தாக்கப்பட்டாா். இதுதொடா்பாக போலீஸாா் ஒருவரை திங்கள்கிழமை கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்காா்குளம் கிராமத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

ஆரணியில் விவசாயிகள் நூதன ஆா்ப்பாட்டம்

ஆரணி வட்டாட்சியா் அலுவலகம் அருகே மாநில அரசைக் கண்டித்து கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் கூடுதலாக நெல் கொள்ம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு பல்வேறு போட்டிகள்

செய்யாற்றை அடுத்த அனக்காவூா் வட்டார வள மையத்தில், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் செவ்வாய்கிழமை நடைபெற்றன. வட்டார வள மையத்துக்கு உள்பட்ட நடுநிலை, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக... மேலும் பார்க்க