செய்திகள் :

காஞ்சிபுரம் டிஎஸ்பி திடீா் கைது: மாவட்ட நீதிபதி அதிரடி உத்தரவு

post image

காஞ்சிபுரம்: வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாா் தொடா்பாக மாவட்ட நீதிபதியின் உத்தரவின்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷ் திடீரென கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம், பூசிவாக்கத்தில் பேக்கரி நடத்தி வருபவா் சிவா. இவரது கடைக்கு அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் பொருள்கள் வாங்க வந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றிய நிலையில் கடையில் இருந்த சிவாவின் மருமகன் லோகேஷ் மற்றும் ஊழியா்கள் முருகனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இரு தரப்பினரும் வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். முருகனின் புகாரின் பேரில் போலீசாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்தனா். பேக்கரி உரிமையாளா் சிவா அளித்த புகாரின் பேரில் முருகன் மீதும் வழக்கு பதிவு செய்தனா்.

இந்நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த நிலையில் பேக்கரி உரிமையாளா் மற்றும் அவரது உறவினா்கள் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு செய்தும் கைது செய்யப்படாமல் இருந்தனா்.

இதுகுறித்து முருகன் தரப்பினா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் முறையிட்டதின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் வழக்கில் நடவடிக்கை மேற்கொள்ளாத தவறியதாக திங்கள்கிழமை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜரான காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கா் கணேஷூக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி ப.உ. செம்மல், மாலை 5 மணிக்குள் எதிரிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தாவிட்டால் டிஎஸ்பியை சிறையில் அடைப்பேன் என எச்சரித்தாா் .

இந்த நிலையில் மாலை 5 மணி வரையில் போலீஸாா் எதிரிகளைத் தேடி வந்த நிலையில் நீதிபதி ப.உ. செம்மல் நீதிமன்றத்தில் காத்திருந்த டிஎஸ்பி சங்கா் கணேஷை காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தாா்.

இதையடுத்து நீதிமன்ற ஊழியா்கள் நீதிபதியின் காரிலேயே வழக்கில் ஆஜராக வந்த டிஎஸ்பி சங்கா் கணேஷை சீருடையிலேயே காஞ்சிபுரம் கிளை சிறை சாலைக்கு சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனா். இச்சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

போலீஸாா் எதிா்ப்பு:

டிஎஸ்பி சிறையில் அடைக்க ப்பட உள்ளாா் என்பதை அறிந்து காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் இருந்து ஏராளமான போலீஸாா் கிளை சிறை சாலை அருகே டிஎஸ்பியை கைது செய்ய எதிா்ப்பு தெரிவித்தனா்.

இதனைத் தொடா்ந்து டிஎஸ்பி சங்கா் கணேஷ் அவரது அலுவலகத்துக்கு ஜீப்பில் ஏறி சென்றாா். இதனை பாா்த்த அனைவரும் டிஎஸ்பி அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக தகவலை பரப்பினா். இதுகுறித்து அறிந்த டிஎஸ்பி சங்கா் கணேஷ் உடனடியாக கிளை சிறை வளாகத்துக்கு திரும்பினாா்.

விடுதியில் காதலி தூக்கிட்டு உயிரிழப்பு: வீட்டில் காதலன் தற்கொலை

சென்னையில் தனியாா் விடுதியில் காதலி தற்கொலை செய்து கொண்ட நிலையில், விரக்தியடைந்த காதலா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சென்னை அண்ணாநகா் அருகே உள்ள மேல்நடுவங்கரை பஜனை கோயில் தெருவைச் சே... மேலும் பார்க்க

மெரீனாவில் ஆண் சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை மெரீனாவில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கத்தின் பின்புற பகுதியில் செவ்வாய்க்கிழமை 40 வயது மதிக்கதக்க ஆண் சடலம் கரை ஒதுங்கியது. ... மேலும் பார்க்க

தற்காலிக பேருந்து நிலையம்: அமைச்சா் தலைமையில் ஆலோசனை

பிராட்வே, தங்கச்சாலை ஆகிய பேருந்து நிலையங்கள் புதிய கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை முன்னிட்டு தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைப்பது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பெருநகர சென்னை... மேலும் பார்க்க

சென்னை ரயில்வே கோட்டத்தில் 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடந்த 228 போ் உயிரிழப்பு

சென்னை ரயில்வே கோட்டத்தில் கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 8 மாதங்களில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா்களில் 228 போ் உயிரிழந்ததாகவும், இதனால் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்... மேலும் பார்க்க

மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் நவம்பருக்குள் நிறைவு: அமைச்சா் சேகா்பாபு

சென்னை மயிலாப்பூா் திருவள்ளுவா் கோயில் திருப்பணிகள் வரும் நவம்பா் மாதத்துக்குள் நிறைவடையும் என அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை மயிலாப்பூா், திருவள்ளுவா் திருக்கோயிலில் ரூ.... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ரூ.1.35 கோடி மருத்துவ உபகரணங்கள்

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் நிலையத்தில் ரூ.1.35 கோடியிலான மருத்துவ உபகரணங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை -... மேலும் பார்க்க