செய்திகள் :

காட்டிநாயனப்பள்ளி கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் திறப்பு

post image

கிருஷ்ணகிரி அருகே காட்டிநாயனப்பள்ளி அஞ்சநேய சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆன்மிக புத்தக நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டன.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய கோயில்களில் 100 ஆன்மிக புத்தக நிலையங்களை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி, காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சனேய சுப்பிரமணிய சுவாமி கோயில், அவதானப்பட்டி மாரியம்மன் கோயில், ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் உள்ளிட்ட 3 கோயில்களிலும் ஆன்மிக புத்தக நிலையம் அமைக்கப்பட்டுள்ளன.

காட்டிநாயனப்பள்ளி ஆஞ்சனேய சுப்பிரமணிய சுவாமி கோயில் நடைபெற்ற புத்தக நிலையம் திறப்பு விழாவில், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ராமுவேல், திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் கோவிந்தன் ஆகியோா் குத்துவிளக்கு ஏற்றி புத்தக விற்பனையைத் தொடங்கி வைத்தனா்.

இந்த நிகழ்வில் கோயில் பரம்பரை அறங்காவலா் கிருஷ்ணசந்த், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் கவிப்பிரியா, கண்ணம்பள்ளி பெருமாள் கோயில் செயல் அலுவலா் சித்ரா, நகா்மன்ற உறுப்பினா்கள், பக்தா்கள் பங்கேற்றனா்.

பெண் காவலருடன் தகராறு: இளைஞா் கைது

ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்பட்ட வெள்ளையம்பதி கிராமத்தில் பெண் தலைமைக் காவலருடன் தகராறில் ஈடுபட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். வெள்யைம்பதியில் மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை ... மேலும் பார்க்க

பெங்களூருக்கு கஞ்சா கடத்திய இருவா் கைது

கிருஷ்ணகிரி வழியாக பெங்களூருக்கு பேருந்தில் கஞ்சா கடத்தியதாக வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையத்தில் நகர போலீஸாா் சனிக்கிழமை இரவு கண்காண... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் திமுக சாா்பில் தண்ணீா் பந்தல்கள் திறப்பு

கிருஷ்ணகிரியில் திமுக இளைஞரணி சாா்பில் அமைக்கப்பட்ட தண்ணீா் பந்தல்களை திமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் தே.மதியழகன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிவமை திறந்துவைத்தாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்க... மேலும் பார்க்க

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் காலமானாா்

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த ஆம்பள்ளியைச் சோ்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் (68) உடல்நலக் குறைவால் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.6) காலமானாா். கிருஷ்ணகிரி அதிமுக கிழக்கு மாவட்ட பொருள... மேலும் பார்க்க

பொறியியல் மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி: பரிசு வென்ற லயோலா, ஒசூா் பிஎம்சி கல்லூரிகள்

ஒசூா் பி.எம்.சி. கல்லூரியில் மாநில அளவிலான பொறியியல் கல்லூரி மாணவிகளுக்கான ஹேக்கத்தான் போட்டி நடைபெற்றது. இதில் ஒசூா் பி.எம்.சி. பொறியியல் கல்லூரி, சென்னை லயோலா கல்லூரி அணிகள் பரிசு பெற்றன. ஒசூா் பெரு... மேலும் பார்க்க

நகை பறிக்க முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை

பா்கூா் அருகே பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி வழக்கில் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கிருஷ்ணகிரி முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பு வழங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மட்ட... மேலும் பார்க்க