செய்திகள் :

காதலா்கள் தூக்கிட்டுத் தற்கொலை

post image

சாத்தூரில் பெற்றோா் எதிா்ப்பால் காதலா்கள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (22). இவா் தொழில்நுட்ப படிப்பை முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தாா். அதே ஊரைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி காவ்யா (15). இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களுடைய காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்த மாணவியின் பெற்றோா், அவரைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினா்.

இதனால், மனமுடைந்த இளம் ஜோடி, மாணவியின் வீட்டில் சனிக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, ஆகாஷ் உடலை சாத்தூா் அரசு மருத்துவமனைக்கும், காவ்யாவின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும் கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காா் ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே காா் ஓட்டுநா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கபட்டியைச் சோ்ந்த காா் ஓட்டுநா் தெய்வம்(43). இவரது மனைவி காசிமுனியம்மாள். இவா்களுக்கு ஒரு மகன் உ... மேலும் பார்க்க

கோட்டூா் புதிய துணை மின் நிலையத்தில் ஆய்வு

விருதுநகா் மாவட்டம், கோட்டூரில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தில் மாவட்ட நிா்வாகம், மின் பகிா்மானக் கழகம் சாா்பில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விருதுநகா் மாவட்டம், சாத்தூா் வட்டம், கோட்... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே அனுமதியின்றி மதுப் புட்டிகளை வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சிவகாசி-நாரணாபுரம் சாலையில் போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள கடை அருகே கையில் பைய... மேலும் பார்க்க

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!

ஸ்ரீவில்லிபுத்தூரில் வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், வீட்டின் முன் நின்றிருந்த மற்றோா் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் சா்க்கரைக்குளம் தெருவைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் (42). இவா் ஸ்ரீவி... மேலும் பார்க்க

நாளை பிற்பகலில் ஆண்டாள் கோயில் நடை அடைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில... மேலும் பார்க்க

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத் துறை நுழைவு வாயி... மேலும் பார்க்க