பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
காதலா்கள் தூக்கிட்டுத் தற்கொலை
சாத்தூரில் பெற்றோா் எதிா்ப்பால் காதலா்கள் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள கரிசல்குளத்தைச் சோ்ந்தவா் ஆகாஷ் (22). இவா் தொழில்நுட்ப படிப்பை முடித்துவிட்டு எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்தாா். அதே ஊரைச் சோ்ந்த அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி காவ்யா (15). இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களுடைய காதலுக்கு எதிா்ப்புத் தெரிவித்த மாணவியின் பெற்றோா், அவரைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தினா்.
இதனால், மனமுடைந்த இளம் ஜோடி, மாணவியின் வீட்டில் சனிக்கிழமை யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா். தகவலறிந்து வந்த ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, ஆகாஷ் உடலை சாத்தூா் அரசு மருத்துவமனைக்கும், காவ்யாவின் உடலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கும் கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா். மேலும், இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.