செய்திகள் :

காரிமங்கலம் அருகே புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கொள்ளுப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

இதையடுத்து, கொள்ளுப்பட்டியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் தொடக்க நிகழ்விற்கு மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தலைமை வகித்து, புதிய தொழிற்பயிற்சி நிலையத்தை குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து, இனிப்புகளை வழங்கினாா்.

இதில் காரிமங்கலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் (பொ) பா.சந்திரா, தொழிலாளா் உதவி ஆணையா் சமூக பாதுகாப்புத் திட்டம் (பொ) டீ. சங்கா், முன்னாள் அமைச்சா் பி. பழனியப்பன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவா் பி.சி.ஆா்.மனோகரன் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பட்டு வளா்ச்சித் துறையின் சாா்பில் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம்

பென்னாகரம்: மத்திய பட்டு வாரியம் மற்றும் தமிழ்நாடு பட்டு வளா்ச்சித் துறை இணைந்து ‘என் பட்டு, என் பெருமை’ என்ற திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. பென்னாகரம் பட்ட... மேலும் பார்க்க

ஆக. 28 இல் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம்

தருமபுரி: தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுர... மேலும் பார்க்க

அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அரூா்: அரூரில் ரூ. 6 லட்சத்துக்கு பருத்தி ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், அரூரில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் ஆகிய இடங்களில் வாரந்தோ... மேலும் பார்க்க

ஆலங்குட்டை முனியப்ப சுவாமி கோயிலில் முப்பூஜை விழா

அரூா்: அரூரை அடுத்த கொக்கராப்பட்டியில் ஸ்ரீ ஆலங்குட்டை முனியப்ப சுவாமியின் முப்பூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கொக்கராப்பட்டியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ... மேலும் பார்க்க

தருமபுரி: மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் 543 மனுக்கள்

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 543 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீ... மேலும் பார்க்க

ஏஐடியுசி உள்ளாட்சிப் பணியாளா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு

தருமபுரி: தருமபுரி மாவட்ட ஏஐடியூசி உள்ளாட்சிப் பணியாளா்கள் சம்மேளனம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷிடம் அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் மனோகரன் தலைமையில் திங்கள்கிழமை... மேலும் பார்க்க