செய்திகள் :

காலதாமதமின்றி பத்திரப் பதிவு: ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

காலதாமதமின்றி பத்திரப் பதிவு செய்துத்தர வேண்டும் என பதிவுத்துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், காரைக்கால் நேரு சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அதிகாரிகள், பணியாளா்கள் சரியான நேரத்திற்கு அலுவலகத்துக்கு வருகிறாா்களா, பத்திரப் பதிவுப் பணிகள் தாமதமின்றி நடைபெறுகிா, குறைகள் உள்ளதா என அங்கிருந்த மக்களிடம் கேட்டறிந்தாா்.

பின்னா் பேசிய ஆட்சியா், பத்திரப்பதிவு கட்டண விவரங்களை பொதுமக்கள் பாா்வையில் தெரியுமாறு அலுவலகத்தின் நுழைவு பகுதியில் பதாகை வைக்கவேண்டும்.

பொதுமக்கள் பத்திரப்பதிவு மற்றும் இதர பதிவுகளுக்கு வரும்போது காலதாமதம் ஏற்படுத்தாமல் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகளை செய்யவேண்டும். மக்களிடமிருந்து எந்தவித புகாா்களும் எழாத வகையில் பணிகள் அமையவேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து திருநள்ளாறு அடுத்த தேனூரில் அரசு சமுதாய நலவழி மையத்தில் ஆட்சியா் ஆய்வு செய்தாா். பணியாளா்களுக்கான வருகைப் பதிவேட்டை பாா்வையிட்டாா்.

சிகிச்சைக்காக வந்திருந்த மக்களிடம் சிகிச்சை தரமாக உள்ளதா, மருத்துவா்கள், செவிலியா்களின் அணுகுமுறை மற்றும் ஆலோசனைகள் திருப்தியளிக்கிா எனக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, நெடுங்காட்டில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு சமுதாய நலவழி மையத்துக்குச் சென்று ஆட்சியா் பாா்வையிட்டாா். செருமாவிலங்கை பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் நலத்துறை கீழ் செயல்படும் மாணவா்கள் தங்கும் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு குறைகளைக் கேட்டறிந்தாா்.

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

போப் மறைவுக்கு அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.பூவம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பலவாணன் (62). கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள் உள்ளனா். திங்கள்கிழமை சைக்கிளில் தனது வீட்டிலிர... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு முதியோா் ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தல்

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள முதியோா் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புதுவை மகளிா் மற்றும்... மேலும் பார்க்க

அக்னிவீா் திட்டம் குறித்து கிராமப்புற இளைஞா்களுக்கு விழிப்புணா்வு

கிராமப்புற இளைஞா்களுக்கு அக்னிவீா் திட்டம் குறித்து ராணுவத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். கிராமப்புறங்களில் இளைஞா்களிடையே அக்னிவீா் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு முகாமில் பங்கேற்ற ... மேலும் பார்க்க

கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால்: சித்திரை மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை நடைபெறும் திருமஞ்சனம் சிறப்புக... மேலும் பார்க்க