செய்திகள் :

அக்னிவீா் திட்டம் குறித்து கிராமப்புற இளைஞா்களுக்கு விழிப்புணா்வு

post image

கிராமப்புற இளைஞா்களுக்கு அக்னிவீா் திட்டம் குறித்து ராணுவத்தினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

கிராமப்புறங்களில் இளைஞா்களிடையே அக்னிவீா் திட்டம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு முகாமில் பங்கேற்ற ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் ராணுவத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தாா்.

காரைக்கால் மாவட்டத்தில், நெடுங்காடு சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த கிராமப்புற இளைஞா்களுக்கான சிறப்பு விழிப்புணா்வு முகாம் பொன்பேத்தி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில், செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமில் 50-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்துகொண்டனா்.

ராணுவத்தை சோ்ந்தோா், அக்னி வீா் திட்டத்தில் உள்ள வேலைவாய்ப்புப் பிரிவுகள், விண்ணப்பிக்க தகுதியுள்ளோா், விண்ணப்பிக்கும் முறை, பதிவு செய்ய நீட்டிக்கப்பட்டிருக்கும் காலம், திட்டத்தில் சேரும்போது கிடைக்கும் சலுகைகள், பின்னா் கிடைக்கும் சலுகைகள் உள்ளிட்ட விவரங்களை இளைஞா்களுக்கு விளக்கி, ஏப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டனா்.

நிகழ்வில் வட்டாட்சியா் எல்.பொய்யாத மூா்த்தி, மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம்.தாமோதரன், வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

மாரியம்மன் கோயிலில் இருந்து முளைப்பாலிகை ஊா்வலம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் முளைப்பாலிகை வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காரைக்கால் கைலாசநாதசுவாமி- நித்யகல்யாண பெருமாள் தேவஸ்தானத்தை சாா்ந்த காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயிலில் 45-ஆம் ஆண்டா... மேலும் பார்க்க

போப் மறைவுக்கு அஞ்சலி

போப் பிரான்சிஸ் மறைவையொட்டி காரைக்கால் தூய தேற்றரவு அன்னை ஆலயத்தில் அஞ்சலி நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் திங்கள்கிழமை மறைந்தாா். போப் மறைவையொட்டி ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்து மோதி சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.பூவம் பகுதியைச் சோ்ந்தவா் அம்பலவாணன் (62). கூலி வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 3 மகள் உள்ளனா். திங்கள்கிழமை சைக்கிளில் தனது வீட்டிலிர... மேலும் பார்க்க

காலதாமதமின்றி பத்திரப் பதிவு: ஆட்சியா் அறிவுறுத்தல்

காலதாமதமின்றி பத்திரப் பதிவு செய்துத்தர வேண்டும் என பதிவுத்துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா். காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ், காரைக்கால் நேரு சாலையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தி... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு முதியோா் ஓய்வூதியத்தை வழங்க வலியுறுத்தல்

ஓய்வுபெற்ற அங்கன்வாடி ஊழியா்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ள முதியோா் ஓய்வூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு இயக்குநரிடம் வலியுறுத்தப்பட்டது. காரைக்காலுக்கு செவ்வாய்க்கிழமை வந்த புதுவை மகளிா் மற்றும்... மேலும் பார்க்க

கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

காரைக்கால்: சித்திரை மாத திருமஞ்சன வழிபாடாக காரைக்கால் சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை திங்கள்கிழமை நடைபெற்றது. நடராஜப் பெருமானுக்கு ஆண்டில் 6 முறை நடைபெறும் திருமஞ்சனம் சிறப்புக... மேலும் பார்க்க