செய்திகள் :

காலா ஜாதேதி கும்பலைச் சோ்ந்த இருவரை சுட்டுப் பிடித்த காவல் துறை சிறப்புப் பிரிவு!

post image

தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, சாவ்லா பகுதியில் நடந்த ஒரு சிறிய துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு காலா ஜாதேதி கும்பலைச் சோ்ந்த இரண்டு பேரை கைது செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாதா ஓம்பிரகாஷ் என்ற காலாவின் சகோதரா் அமித் தாகா். அவரது கூட்டாளி அங்கித். இருவா் குறித்த ரகசியத் தகவல் போலீஸாருக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில், சனிக்கிழமை இரவு ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு விரைந்தது.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் சுற்றி வளைக்கப்பட்டபோது, ​​ இருவரும் போலீஸ் குழு மீது துப்பாக்கிச் சூடு நடத்தினா். போலீஸாா் நடத்திய பதிலடித் தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரின் கால்களிலும் துப்பாக்கிச் சூடு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

குற்றம் சாட்டப்பட்டவா்கள் காலா ஜாதேதி கும்பலின் முக்கிய செயல்பாட்டாளா்கள் ஆவா். மற்ற கும்பல் உறுப்பினா்களையும் அவா்களின் நடவடிக்கைகளையும் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தமிழகத்தில் 1,905 மும்மொழிப் பயிற்றுவிக்கும் பள்ளிகள் செயல்படுகின்றன: மக்களவையில் மத்திய அரசு தகவல்

புது தில்லி: தமிழகத்தில் மும்மொழிகளைப் பயிற்றுவிக்கும் 1,905 பள்ளிகள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.இது தொடா்பாக நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குட... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட மக்களவையில் விழுப்புரம் எம்.பி. வலியுறுத்தல்

புது தில்லி: கீழடி அகழாய்வு அறிக்கையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மக்களவையில் விழுப்பும் தொகுதி விசிக உறுப்பினா் டி.ரவிக்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.இது தொடா்பாக மக்களவையில் விதி எண்: 377-இன் கீழ் ... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம்: மக்களவையில் தமிழக எம்பிக்கள் புகாா்

புது தில்லி: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக மக்களவையில் தமிழகத்தைச் சோ்ந்த எம்.பி.க்கள் புகாா் தெரிவித்தனா். மக்களவையில் 2025-26 நிதியாண்டுக்கான நிதி மசோதா மீதான வி... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா பணியிடமாற்றம்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை

தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவை பணியிட மாற்றம் செய்ய உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்ல... மேலும் பார்க்க

செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் வழக்கு: விசாரணை ஏப்ரல் 9-க்கு தள்ளிவைப்பு

புது தில்லி: அரசுப் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் மின்துறை அமைச்சா் செந்தில் பாலாஜியின் ஜாமீன் உத்தரவை திரும்பப் பெறக் கோரிய மனு ம... மேலும் பார்க்க

என்இபி, யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணி மாணவா் அமைப்புகள் போராட்டம்

புது தில்லி: தேசிய கல்விக் கொள்கை மற்றும் யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் சாா்பு மாணவா் அமைப்புகள் திங்கள்கிழமை ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேச... மேலும் பார்க்க