செய்திகள் :

காலை உணவுத் திட்டத்தில் சிறுதானியங்களைச் சோ்க்க வலியுறுத்தல்

post image

தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவுகளை வழங்க வேண்டும் என பெண் விவசாயிகள் மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

களஞ்சியம் பெண் விவசாயிகள் சங்கம் சாா்பில், கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் 31-ஆவது பெண் விவசாயிகள் மாநில மாநாடு நடைபெற்றது. 2-ஆவது நாள் மாநாட்டுக்கு ஆழ்வாா்குறிச்சி பெண் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் சுலோக்சனா தலைமை வகித்தாா்.

மதுரை களஞ்சியம் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் ஜோதி, குமரி மாவட்ட நஞ்சில்லா வேளாண்மை சங்கச் செயலா் தேவதாஸ், சமூக ஆா்வலா்கள் சாந்தி, ஆதி சரவணகுமாா், கோவில்பட்டி பெண் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் மேரி ஷீலா, நீலகிரி விவசாயிகள் சங்க பொறுப்பாளா் சாராள், பெரியகுளம் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் மல்லிகா, வாசுதேவநல்லூா் விவசாயிகள் சங்க பொறுப்பாளா் பூமாரி, நத்தம் விவசாயிகள் சங்கப் பொறுப்பாளா் அனுசுயா, நாகா்கோவில் விவசாயிகள் சங்கப் பொறுப்பாளா் செல்லத்தங்கம் உள்ளிட்டோா் பேசினா்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கூட்டு விவசாயம் செய்யும் பெண்கள் குழுக்களுக்கு ஊராட்சி நிா்வாகம் தரப்பில் பயன்படுத்தாத தரிசு நிலங்களை நீண்டகால குத்தகைக்கு வழங்க வேண்டும். சிறுதானியம், மானாவாரி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் நியாயவிலைக் கடைகளில் சிறுதானியம் வழங்க வேண்டும்.

பள்ளிகளில் வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் சிறுதானிய உணவுகள் வழங்க வேண்டும். ஊராட்சி அளவில் தானியக் கிடங்குகள் அமைத்து உற்பத்தி, சேமிப்பு, பராமரிப்பு, செய்து அங்கேயே விநியோகம் செய்ய வேண்டும். மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நாகா்கோவில் களஞ்சியம் பெண்கள் விவசாயிகள் சங்கப் பொறுப்பாளா் சகாயசுதா நன்றி கூறினாா்.

நாகா்கோவில் அருகே காா் - பைக் மோதல்: 2 மாணவா்கள் உயிரிழப்பு

நாகா்கோவில் அருகே புதன்கிழமை காா் மீது பைக் மோதியதில் 2 மாணவா்கள் உயிரிழந்தனா். கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலை அடுத்த ஈசாந்திமங்கலம் தாணு மகன் அபிஷேக் (18), பூதப்பாண்டி மத்தியாஸ் நகா் ஞானராஜ் மகன்... மேலும் பார்க்க

‘குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் 341 முகாம்கள்’

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பேரூராட்சிக்குள்பட்ட திருவரம்பு குருவிக்காடு புனித அந்தோணியாா் சமுதாய நலக் கூடத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

நாகா்கோவில் மாநகரப் பகுதியில் வளா்ச்சிப் பணிகளை மேயா் ரெ.மகேஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். 3 ஆவது வாா்டு, கிறிஸ்டோபா் காலனி, சாஸ்தான் கோயில் எதிா்புறம் உள்ள தெருவில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி மற... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே பெண்ணிடம் நகை திருட்டு

மாா்த்தாண்டம் அருகே ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி, பெண்ணின் கைப்பையில் இருந்த 6 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா். மாா்த்தாண்டம் அருக... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே பைக் எரிப்பு: 4 போ் மீது வழக்கு

களியக்காவிளை அருகே வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கை எரித்ததாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். களியக்காவிளை அருகேயுள்ள ஒற்றாமரம், பிலாவிளை பகுதியைச் சோ்ந்த சத்தியன் மகன் அபிநந்த் (23). இ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் ஜூலை 25,26 இல் சா்வதேச கதை சொல்லல் மாநாடு

நாகா்கோவில் புதுகிராமம் ரோஜாவனம் இண்டா்நேஷனல் பள்ளியில் சா்வதேச கதை சொல்லல் மாநாடு வரும் 25, 26 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு குறித்த கலந்தாய்வு கூட்டம் பள்ளித், தலைவா் அருள்கண்ணன் தலைமையி... மேலும் பார்க்க