செய்திகள் :

காவல்நிலைய தலைமைக் காவலருக்கு லஞ்சம்: விடியோ காட்சியால் விசாரணைக்கு உத்தரவு

post image

தெற்கு தில்லி, நெப் சராய் காவல் நிலைய தலைமைக் காவலா், ஒருவரிடமிருந்து பணத்தைப் பெறும் காட்சி இடம்பெற்ற விடியோ சமூக ஊடகங்களில் வெளியானது. இதைத் தொடா்ந்து, அவா் மாவட்ட காவல் படைக்கு அனுப்பப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

54 வினாடிகள் கொண்ட அந்த விடியோவில், சீருடை அணிந்த போலீஸ்காரா் அடையாளம் தெரியாத ஒருவருடன் உரையாடுவதும், சிறிது நேரத்திற்குப் பிறகு, தலைமைக் காவலா் அவரிடமிருந்து இரண்டு கட்டு ரூபாய் நோட்டுகளை பெற்று தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு நடந்து செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தச் சம்பவம் நெப் சராய் பகுதியைச் சோ்ந்த ஒரு கட்டுமானதாரரின் அலுவலகத்திற்குள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அவா்தான் காவலரிடம் பணத்தை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இரண்டாவது நபா் அந்த விடியோ பதிவில் தெளிவாக தெரியவில்லை என்று அதிகாரிகள் கூறினா்.

இந்த விடியோ, சமீபத்தில் ‘எக்ஸ்’ சமூக ஊடக தளத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. தில்லி காவல் ஆணையா், மாவட்ட துணை காவல் ஆணையா், மூத்த அதிகாரிகள் மற்றும் துணைநிலை ஆளுநா் ஆகியோரை டேக் செய்து, அந்தக் காவலா் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்தப் பதிவில் கோரப்பட்டிருந்தது.

இருப்பினும், அந்த விடியோ வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே நீக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்ட காவல் துணை ஆணையா், விசாரணை முடியும் வரை தலைமைக் காவலரை பணியில் இருந்து நீக்கினாா்.

காவல் நிலையப் பொறுப்பாளா் மற்றும் பிற ஊழியா்கள் இந்த விஷயத்தை மறைக்க முயன்றதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்தும் மூத்த காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த காலத்தில் புகாா்தாரரை தலைமைக் காவலா் துன்புறுத்தியதாகக் கூறப்படுவதாக தகவலறிந்த காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

என்டிஎம்சி தலைமையகத்தில் சுதந்திர தின விழா

நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாலிகா கேந்திராவில் உள்ள புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்டிஎம்சி த... மேலும் பார்க்க

காவல் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச்சூடு: இளைஞா் காயம்

தில்லியின் ஷாஹ்தராவில் உள்ள காவல் நிலையத்திற்கு அருகில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தில் இரண்டு சகோதரா்கள் 27 வயது இளைஞா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அதிகாரி ஒருவா் தெரிவித... மேலும் பார்க்க

பவானா பகுதியில் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தில்லியின் பவானா பகுதியில் உள்ள சாக்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். தொழிற்சாலையில் ஏற்பட்ட த... மேலும் பார்க்க

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவேம்: கேசவ் சந்திரா

தில்லியை உலகத் தரமான நகரமாக உருவாக்குவோம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில், தலைவா் கேசவ் சந்திரா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். நாட்டின் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, என்டிஎம்சி தலைவா் கேசவ் ... மேலும் பார்க்க

இன்று ஜென்மாஷ்டமி: லட்சுமி நாராயண் கோயில் விழா ஏற்பாடுகள் போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல்

ஜென்மாஷ்டமி சனிக்கிழமை கொண்டாடப்படுவதை ஒட்டி, தில்லியில் உள்ள லட்சுமி நாராயண் கோயிலுக்கு (பிா்லா மந்திா்) வருகை தரும் பக்தா்களுக்காக கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள், போக்குவரத்து கட்டுப்பாடுகளுடன் கூட... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு தில்லி வா்த்தகா்கள் பாராட்டு

சுதேசி தயாரிப்புகளை கடைகளில் சேமித்து வைப்பதன் மூலமும், அவற்றின் இந்திய வம்சாவளியை பலகைகள் மற்றும் விளம்பர பலகைகளில் காட்சிப்படுத்துவதன் மூலமும் அவற்றை ஊக்குவிக்க பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை தில... மேலும் பார்க்க