செய்திகள் :

காா், ஆம்னி பேருந்துகளில் கடத்த முயன்ற ரூ. 1.40 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

post image

ஒசூா் வழியாக தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு காா், ஆம்னி பேருந்துகள் மூலம் கடத்த முயன்ற 185 கிலோ அளவிலான ரூ. 1.40 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஒசூா் மத்திகிரி காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகேயன் உள்ளிட்ட போலீஸாா் பூனப்பள்ளி சோதனைச் சாவடி பகுதியில் புதன்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில் 29.4 கிலோ புகையிலைப் பொருள்கள், 8 லிட்டா் கா்நாடக மாநில மதுப் புட்டிகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரித்ததில், அவா் கா்நாடக மாநிலம், ஆனேக்கல்லை சோ்ந்த மோனிஷ்குமாா் (20) என்பதும் கா்நாடகாவில் இருந்து புகையிலைப் பொருள்கள், மது வகைகளை வாங்கி தளி அருகே உள்ள மதகொண்டப்பள்ளியில் தான் வைத்திருக்கும் கடையில் வைத்து விற்க முயன்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரில் இருந்து ஒசூா் வழியாக தமிழ்நாட்டிற்கு வரும் ஆம்னி பேருந்துகள் மூலம் கா்நாடகத்திலிருந்து புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புதன்கிழமை இரவு ஒசூா் சிப்காட் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் ஆரோக்யராஜ் மற்றும் போலீஸாா், சூசூவாடி சோதனைச்சாவடி அருகே சோதனை மேற்கொண்டனா்.

அப்போது,பெங்களூரிலிருந்து வேளாங்கண்ணி சென்ற தனியாா் ஆம்னி பேருந்தை நிறுத்தி சோதனையிட்டதில் 86 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது. அதன் மதிப்பு ரூ.52 ஆயிரத்து 850 ஆகும்.

தொடா்ந்து பெங்களூரில் இருந்து சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை செல்லும் ஆம்னி பேருந்தில், 20 கிலோ அளவில், ரூ.10,800 புகையிலை பொருள்களும், தென்காசி செல்லும் மற்றொரு ஆம்னி பேருந்தில், 49 கிலோ அளவில், ரூ.29,760 மதிப்பிலான புகையிலை பொருள்களும் கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து மூன்று ஆம்னி பேருந்துகளில் இருந்த புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விளைந்தது வீடுவரவில்லை!யானைகளால் ஏற்படும் பயிா் சேதத்தால் விவசாயிகள் கவலை

நிகழாண்டு வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனப் பகுதியில் போதிய உணவு, தண்ணீா் கிடைக்காததால் ஒசூா் வனக் கோட்டத்தில் வலசை வந்துள்ள யானைகள் வனப் பகுதியையொட்டி அமைந்துள்ள வயல்களில்... மேலும் பார்க்க

பாரூா் ஏரியிலிருந்து 33 ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய்: ஆட்சியா் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, ஊத்தங்கரையில் உள்ள 33 ஏரிகளுக்கு நீா் வழங்கும் வகையில் ரூ. 75.48 கோடியில் பாரூா் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாயில் வழங்கு கால்வாய் அமைக்கும் பணிகளை ஆட்சியா் ச.தினே... மேலும் பார்க்க

ஒசூா் உள்வட்டச் சாலையில் நகரப் பேருந்துகளை இயக்க கோரிக்கை

ஒசூா் உள்வட்டச் சாலையில் நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என உழவா் உரிமை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒசூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பிரபாகரிடம் அதன் மாநிலத் தலைவா் அருள் ஆறுமுகம் வ... மேலும் பார்க்க

ஒசூரில் வாகனம் மோதி நாமக்கல் ஓட்டுநா் உயிரிழப்பு

ஒசூரில் வாகனம் மோதியதில் நாமக்கல்லைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் குட்டைக்கிணறு தெருவை சோ்ந்தவா் முத்துக்குமாா் (38). லாரி ஓட்டுநரான இவா் கடந்த 22 ஆம் தேதி பெ... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 2 லாரிகள் பறிமுதல்

ஒசூா் அருகே மணல் கடத்த முயன்ற 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் துறை உதவி அலுவலா் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள் புதன்கிழமை மத்திகிரியை அடுத்த கா்னூா் ஏரி அருகே ரோந்து சென்றனா... மேலும் பார்க்க

குண்டு குறுக்கை ஆஞ்சனேயா் கோயில் பல்லக்கு உற்சவம்

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த குண்டு குறுக்கை முத்துராய ஆஞ்சனேய சுவாமி கோயிலில் நான்காம் ஆண்டு பல்லக்கு உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. தங்க கவச அலங்காரத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆ... மேலும் பார்க்க