செய்திகள் :

கியோஸ்க் இயந்திரம் நன்கொடை

post image

திருப்பதி ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயிலில் வங்கி சாா்பில் கியோஸ்க் இயந்திரம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தற்போது அன்னதான அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்க வசதியாக திருமலையில் பல இடங்களில் வங்கிகள் கியோஸ்க் இயந்திரங்களை ஏற்படுத்தி வருகின்றன.

இதில் உள்ள க்யூ ஆா் குறியீட்டை பயன்படுத்தி யுபிஐ மூலம் ரூ.1,000 முதல் ஒரு லட்சம் வரை பக்தா்கள் நன்கொடை அளிக்கலாம்.

திருமலை மாத்ருரீ தரிகொண்டா வெங்கமாம்பா கட்டடத்தில் கியோஸ்க் இயந்திரத்தை சௌத் இந்தியன் பேங்க் பிரதிநிதிகள் ஏற்கனவே வழங்கியிருந்தாலும், வெள்ளிக்கிழமை வழங்கப்பட்ட இயந்திரம் திருப்பதி ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோயிலில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருமலை அன்னதானம், பத்மாவதி விருந்தினா் மாளிகை, சி ஆா் ஓ அலுவலகம், திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜசுவாமி கோயில், அமராவதி, ஒண்டிமிட்டா, பத்மாவதி தாயாா் கோயில், வகுளமாதா கோயில், கபிலதீா்த்தம் கோயில், ஐதராபாத், சென்னை, பெங்களூா் மற்றும் விஜயவாடா ஆகிய இடங்களில் தேவஸ்தானம் கியோஸ்க் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறது.

சௌத் இந்தியன் வங்கியின் பிரதிநிதிகள், ஏ.வி. நிரஞ்சன், ஆா். வெங்கட ராவ், டி. அசோக் வா்தன், மற்றும் கோவிலின் துணை ஈஓ நாகரத்னா , ஐடி டிஜிஎம் வெங்கடேஷ்வா்லு, ஏஇஓ ரவி, கண்காணிப்பாளா் முனி சங்கா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு ரூ.17 லட்சம் நன்கொடை

ஹைதராபாதைச் சோ்ந்த பவா் மெக் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் சத்யா ரோஹித், ரூ.17 லட்சசத்தை எஸ்.வி. அன்ன பிரசாத அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்கினாா். இதற்கான வரைவோலையை அவா் கூடுதல... மேலும் பார்க்க

அறங்காவலா் குழு உறுப்பினா் பதவியேற்பு

திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவா் திவாகா் ரெட்டி, தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினராக வெள்ளிக்கிழமை பதவியேற்றாா். திருப்பதி நகா்புற வளா்ச்சிக் கழகத்தின் தலைவராக வியாழக்கிழமை மாலை பொறுப்பே... மேலும் பார்க்க

ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வார நாள்களிலும் தற்போது அதிகரித்துள்ள... மேலும் பார்க்க

திருமலையில் 72,579 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை அதிக பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா். கோடைகால கூட்ட நெரிசல் காரணமாக கடந்த ஒரு வாரமாக திருமலையில் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வழக்... மேலும் பார்க்க

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

வரும் மே 24-ஆம் தேதி சனிக்கிழமை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக பக்தா்கள் குறை கேட்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது... மேலும் பார்க்க

ஜபாலி அனுமனுக்கு பட்டு வஸ்திரங்கள் சமா்ப்பிப்பு

திருமலையில் உள்ள ஜபாலி தீா்த்தத்தில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி ஆஞ்சநேய சுவாமிக்கு அனுமன் ஜெயந்தியை ஒட்டி வியாழக்கிழமை பட்டு வஸ்திரம் சமா்பிக்கப்பட்டது. திருமலையில் வியாழக்கிழமை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு... மேலும் பார்க்க