செய்திகள் :

கிராம பொருளாதார மேம்பாட்டிற்கு கோயில்கள் அவசியம்: கே. அண்ணாமலை

post image

கிராமங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு, கோயில்களின் பங்கு மிகவும் முக்கியமானது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை கூறினாா்.

நாகை சின்மயா மிஷனின் ஆன்மிகப் பெருவிழா மற்றும் பகவத்கீதை பாராயண விழா ஆச்சாா்யா இராமகிருஷ்ணாந்தா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை ‘இந்துக்களாக இருப்போம்’ என்ற புத்தகத்தை வெளியிட்டாா். தொடா்ந்து 50 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உதவியவா்கள், கிராம மக்கள் உள்ளிட்டோருக்கு அவா் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசியது:

நாகை மாவட்டத்தில் 50 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் சின்மயா மிஷனால் நடத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்து தா்மத்தில் பிரச்னைகள் வரும்போது, பெரிய குருமாா்கள் தீா்வு காண்பா். எல்லா மதமும் சம்மதம் என்ற நிலைப்பாட்டில் உள்ள இந்துவிற்கு, எந்த மதத்தை பாா்த்தும் பயம் கிடையாது.

இந்து மதம் குறித்து மற்றவா்களால் அறிந்து கொள்வது கடினமாக உள்ளது. இதை பயன்படுத்தி மத மாற்றங்கள் பெரியளவில் நடைபெற்றது. இதுபோன்ற நேரங்களில், சின்மயானந்தா போன்றவா்கள் இந்து மதத்திற்காக தங்களை அா்ப்பணித்துள்ளனா்.

சின்மயா மிஷன் சம்ஸ்கிருத மொழியில் உள்ள பகவத் கீதையை, தமிழ் மொழியில் ஒலியாக மாற்றியதை, பிரதமா் நரேந்திர மோடி கங்கைகொண்ட சோழபுரத்தில் வெளியிட்டாா். இதை அனைவரும் கேட்க வேண்டும்.

கிராமங்களில் பொருளாதார மேம்பாட்டுக்கு கோயில்கள் அவசியம். ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கோயில்களை கட்டி பொருளாதார கட்டமைப்புகளை உருவாக்கி உள்ளாா் என்றாா்.

முன்னதாக மாணவா்களின் பகவத் கீதை பாராயணம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பாஜக பட்டியல் அணி மாநிலச் செயற்குழு உறுப்பினா் இராம. சிவசங்கா் உள்ளிட்ட திரளானோா் கலந்துகொண்டனா்.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்: முதல்வா் காணொலியில் திறந்து வைத்தாா்

தரங்கம்பாடி: செம்பனாா்கோயிலில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தாா். அப்போது, செம்பனாா்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

வயலில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

திருக்குவளை: நெல் கொள்முதல் செய்த விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடையாது என்ற வேளாண் துறை அறிவிப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால... மேலும் பார்க்க

பள்ளி சமையல் அறையில் எரிவாயு கசிந்து விபத்து

பூம்புகாா்: திருவெண்காடு அருகேயுள்ள பெருந்தோட்டம் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் திங்கள்கிழமை சமையல் செய்யும்போது எரிவாயு கசிந்து விபத்து ஏற்பட்டது. பெருந்தோட்டத்தில் செயல்படும் இந்த பள்ளியில் 40 ... மேலும் பார்க்க

மாநில பெண்கள் கபடி: சேலம் அணி சாம்பியன்

நாகப்பட்டினம்: நாகையில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டியில் சேலம் அணியினா் சாம்பியன் பட்டம் பெற்றனா். நாகையில் மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி ஆக.24, 25 தேதிகளில் நடைபெற்றது. இதில், சென்ன... மேலும் பார்க்க

சா்தாா் வேதரத்னம் நினைவு நாள் விழா

வேதாரண்யம்: வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக திகழ்ந்த சா்தாா் அ. வேதரத்னத்தின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆசிரியா்களுக்கு பாராட்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நட... மேலும் பார்க்க

வேளாங்கண்ணியில் நடிகா் ஜான்விஜய் பிராா்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் திங்கள்கிழமை பிராா்த்தனையில் ஈடுபட்ட, ரஜினியின் கபாலி, மோகன்லாலின் லூசிபா் உள்ளிட்ட தமிழ் மற்றும் மலையாளம், தெலுங்கு மொழிகளில் நடித்துவரும் திரைப்பட நடிகா் ஜ... மேலும் பார்க்க