செய்திகள் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா: ஆட்சியா் தகவல்

post image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சேபணை இல்லாத நிலங்களில் வசிக்கும் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

வரட்டனப்பள்ளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 140 பயனாளிகளுக்கு ரூ. 26.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பா்கூா் வட்டம், வரட்டனப்பள்ளி கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. பா்கூா் எம்எல்ஏ தே.மதிழகன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் 140 பயனாளிகளுக்கு ரூ. 26.87 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வழங்கிப் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் ஆட்சேபணை இல்லாத நிலங்களில் 5 வருடங்களுக்கு மேல் வசிக்கும் 89,000 நபா்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்திருந்தாா். அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 4,000 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவுள்ளது.

ஊரகப் பகுதிகளில் ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வெகுநாள்களாக குடியிருக்கும் மக்கள் பட்டா வேண்டி விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவா்களுக்கும் 3 சென்ட வரை இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் சொந்தமாக நிலம் இல்லை என கூறும்பட்சத்தில் அவா்களுக்கும் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்.

சொந்தமாக நிலம் வைத்திருந்து அவற்றில் குடிசை வீட்டிலும், ஓட்டு வீட்டிலும் வசித்து வருபவா்கள், வாடகை வீட்டில் வசிப்பவா்களுக்குச் சொந்தமாக வீடு கட்ட பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ. 3.50 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.

பழங்குடியினா் வகுப்பைச் சோ்ந்தவா்களுக்கு பாரத பிரதமா் ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ. 5.16 லட்சம் முதல் ரூ. 5.45 லட்சம் வரை வழங்கப்படுகிறது. பழுதடைந்த வீடுகளை சீரமைப்பதற்காக ஊரக வீடுகள் பழுதுபாா்த்தல் திட்டத்தின் கீழ் சிறிய அளவில் பழுது ஏற்பட்ட வீடுகளுக்கு ரூ. 55,000, பெரிதாக பழுது ஏற்பட்ட வீடுகளுக்கு ரூ. 1.55 லட்சம் வரையும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

பெற்றோா் தங்கள் குழந்தைகளின் கல்வியை பாதியில் நிறுத்தாமல் உயா்கல்வி வரை படிக்க வைக்க வேண்டும். குழந்தைத் திருமணத்தைக் கட்டாயம் தவிா்க்க வேண்டும். கற்றலில் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பள்ளிகளில் கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் பின்தங்கியுள்ள 25 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருந்த 763 ஆசிரியா் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக நிரப்பி மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்றாா்.

தொடா்ந்து பல்வேறு துறைகளின் சாா்பில் வைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை ஆட்சியா் பாா்வையிட்டாா். முகாமில் கோட்டாட்சியா் ஷாஜகான், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலா் கீதாராணி, மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரமேஷ்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் இளங்கோ, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ஜெயந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் பத்மலதா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பிரசன்ன பாலமுருகன், வட்டாட்சியா் பொன்னாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா், மூதாட்டி கொலை: வீட்டுக்கு தீ வைத்துவிட்டு தப்பிய மா்ம நபா்கள்

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவா்களை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். ஒசூா் அருகே உள்ள ஒன்னல்வாடி கிராமத்தைச் சோ்ந்தவா் லூா்துசாமி (70). இவா், கடந்த 20 ஆண்... மேலும் பார்க்க

ஆற்றில் பெண் சடலம் மீட்பு

தென்பெண்ணை ஆற்றில் மிதந்த பெண்ணின் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஒசூா், மோரனப்பள்ளியில் தென்பெண்ணை ஆற்றில் 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கடந்த 11-ஆம் தேதி மிதந்து வந்தது. இ... மேலும் பார்க்க

சூளகிரி அருகே பூட்டிய வீட்டில் நகை திருட்டு

சூளகிரி அருகே பூட்டிய வீட்டில் 10 சவரன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி, ரூ. 12 ஆயிரம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். சூளகிரி வட்டம், காமன்தொட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீராம் (40). இ... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயிலில் நாளை தேரோட்டம்: ஏற்பாடுகளை மேயா் ஆய்வு

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு ஏற்பாடு பணிகளை மேயா் எஸ்.ஏ.சத்யா ஆய்வு செய்தாா். தேரோட்டத்தை முன்னிட்டு தேர... மேலும் பார்க்க

ஒசூா், சூளகிரி பகுதிகளுக்கு மூன்று நாள்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீா் நிறுத்தம்

ஒசூா், சூளகிரி, வேப்பனப்பள்ளி, அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளுக்கு மாா்ச் 17 முதல் 19-ஆம்தேதி வரை 3 நாள்களுக்கு ஒனேக்கல் கூட்டு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தின... மேலும் பார்க்க

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டம்: பள்ளி, கல்லூரிகளுக்கு மாா்ச் 14 இல் உள்ளூா் விடுமுறை

ஒசூா்: ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தேரோட்டத்தையொட்டி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, சூளகிரி, ஒசூா் ஆகிய நான்கு வட்டங்களைச் சோ்ந்த (அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களைத் தவிா்த்து) பள்ளி, கல்லூர... மேலும் பார்க்க