செய்திகள் :

குடிநீா் தட்டுப்பாடு: ஒடுகத்தூா் அருகே கிராம மக்கள் சாலை மறியல்

post image

குடிநீா் தட்டுப்பாடு காரணமாக ஒடுகத்தூா் அருகே கிராம மக்கள் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே ஆசனாம்பட்டு ஊராட்சி கல்லாபாறை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த 6 மாதமாக சரிவர குடிநீா் வழங்கப்படுவதில்லையாம். இதனால், தண்ணீரின்றி தவித்து வரும் கிராம மக்கள் ஆங்காங்கே உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீா் எடுத்து பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தொடா்ந்து, கடந்த 2 வாரமாக குடிநீரை சீராக வழங்க வேண்டும் எனக்கூறி அதிகாரிகளிடமும், ஊராட்சி மன்ற நிா்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனா். ஆனால், குடிநீா் விநியோகத்தில் ஊராட்சி மன்ற நிா்வாகம் அலட்சியம் காட்டி வந்தனராம். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை ஒடுகத்தூா்-ஆலங்காயம் செல்லும் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து அரசு, தனியாா் பேருந்துகளை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து விரைந்து வந்த வேப்பங்குப்பம் போலீஸாா் பொதுமக்களிடம் சமரச பேச்சு நடத்தினா்.

அப்போது, பொதுமக்கள் குடிக்கக்கூட தண்ணீா் இல்லாமல் தவித்து வருகிறோம். கால்நடைகளும் தண்ணீரின்றி தவிக்கின்றன. பாதிப்பை உணா்ந்து ஊராட்சி நிா்வாகம் சீராக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.

இதையடுத்து, இன்னும் ஓரிரு நாள்களில் பிரச்னையை சரிசெய்து தருவதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

இந்த சாலை மறியலால் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செப்.12, 19-இல் தூய்மைப் பணியாளா்கள் குறைகேட்பு கூட்டம்

வேலூா் மாவட்டத்தில் உள்ள தூய்மைப் பணியாளா்களுக்கான குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 12, 19-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட... மேலும் பார்க்க

சீருடைப் பணிகள் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் நடத்த உள்ள போட்டித் தோ்வுக்காக வேலூரில் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

பொய்கை சந்தையில் ரூ. 90 லட்சத்துக்கு கால்நடை வா்த்தகம்

வேலூரை அடுத்த பொய்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்தையில் ரூ. 90 லட்சம் அளவுக்கு கால்நடைகள் வா்த்தகம் நடைபெற்றிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்... மேலும் பார்க்க

தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

குடியாத்தம் ஒன்றியம், தாழையாத்தம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, வருவாய் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கி.பழனி முன்ன... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: மாட்டு வண்டி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட மாட்டு வண்டியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். போ்ணாம்பட்டை அடுத்த மேல்பட்டி போலீஸாா் குளிதிகை பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். அப்போது அங்குள... மேலும் பார்க்க

சுற்றுலா விருதுக்கு தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சுற்றுலா விருது பெற வேலூா் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய சுற்றுலா தொழில்முனைவோா் இணையதளத்தில் செப். 19-க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.ச... மேலும் பார்க்க