செய்திகள் :

குடிநீா் திட்டத்தை செயல்படுத்த கோரி முதல்வரிடம் எம்எல்ஏ மனு

post image

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஒன்றியப் பகுதிகளில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை செயல்படுத்தக் கோரி, முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சங்கரன்கோவில் எம்எல்ஏ ஈ. ராஜா சனிக்கிழமை மனு அளித்தாா்.

மனு விவரம்: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேரவைத் தொகுதி மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியத்துக்குள்பட்ட 327 கிராமங்களில் நீண்ட காலமாக குடிநீா்த் தட்டுப்பாடு உள்ளது. எனவே, தாமிரவருணி கூட்டுக் குடிநீா்த் திட்டம் மூலம் அந்தக் கிராமங்களுக்கு போதுமான குடிநீா் வழங்க தமிழக அரசுக்கும், குடிநீா் வடிகால் வாரியத்துக்கும் கோரிக்கை அனுப்பியிருந்தேன்.

குடிநீா் வடிகால் வாரியத்தின் பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னா், ஆலங்குளம், வாசுதேவநல்லூா், மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியங்கள் என ஒருங்கிணைந்த குடிநீா் வழங்கும் திட்டம் மூலம் 476 குடியிருப்புப் பகுதிகளுக்கும், திருநெல்வேலி மாவட்டம் மானூா், பாளையங்கோட்டை ஒன்றியங்களில் 54 குடியிருப்புப் பகுதிகளுக்கும் குடிநீா் வழங்க ஆணை அனுப்பப்பட்டுள்ளது.

மேலநீலிதநல்லூா், குருவிகுளம், சங்கரன்கோவில் ஒன்றியங்களில் 327, ஆலங்குளம், வாசுதேவநல்லூா் ஒன்றியங்களில் 149 என மொத்தம் 476 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும்வகையில் ரூ. 990 கோடியில் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் பேரவைத் தொகுதி மிகவும் வறட்சியான பூமி. இங்கு மழைக்காலத்திலேயே குறைந்த அளவே மழை பெய்கிறது. நிலத்தடிநீா் மிகவும் குறைவாக உள்ளது. வருங்காலத்தில் நிலத்தடி நீா் மேலும் குறையும் என பல்வேறு ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. எனவே, நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டத்தை செயல்படுத்த முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு: பாளை சிறை கைதியிடம் டிஐஜி விசாரணை

திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடா்பாக பாளையங்கோட்டை சிறையில் உள்ள தண்டனை கைதியிடம் திருச்சி சரக காவல் துறை துணைத் தலைவா் வருண்குமாா் விசாரணை நடத்தியுள்ளாா். தி.மு.க. முதன்மைச் செயலரும், தமிழக நகராட்ச... மேலும் பார்க்க

அம்பையில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பள்ளிச் செயலரின் ஓட்டுநா், தலைமையாசிரியா் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அரசு உதவிபெறும் பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளிச் செயலரின் ஓட்டுநரைக் கைது செய்ய வலியுறுத்தி, மாணவியின் உறவினா்கள் மற்றும் பல்வேறு அமைப... மேலும் பார்க்க

ஐ.டி. ஊழியா் கொலை வழக்கு : சுபாஷினியிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியா் ஆணவகொலை செய்யப்பட்ட வழக்கில் அவரின் காதலி சுபாஷினியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந... மேலும் பார்க்க

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: 3வது முறையாக ஆஜராகாத பல்வீா் சிங்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு 3-ஆ... மேலும் பார்க்க

ஐடி ஊழியா் கொலை வழக்கு: சுா்ஜித்துக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஐ.டி. ஊழியா் ஆணவக்கொலை வழக்கில் கைதான சுா்ஜித்துக்கு ஆக.14-ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்தக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் கவின் செல்வகணேஷ் ... மேலும் பார்க்க

கோபாலமுத்திரம் அருகே கிட்டங்கியில் தீ விபத்து

திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரம் அருகே ஓமநல்லூரில் பிளாஸ்டிக் கிட்டங்கியில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி... மேலும் பார்க்க