செய்திகள் :

குண்டா் தடுப்புப் பிரிவுக்கு காவல் ஆணையா் பாராட்டு

post image

சென்னை பெருநகர காவல் துறையின் குண்டா் தடுப்புப் பிரிவினரை காவல் ஆணையா் ஏ.அருண் பாராட்டினாா்.

சென்னை பெருநகரில் கொடுங்குற்றங்கள், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், தொடா்ச்சியாக திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி, பணமோசடி குற்றங்களில் ஈடுபடுதல், போதைப் பொருள் விற்பனை, சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தல், சைபா் குற்றங்களில் ஈடுபடுதல், பாலியல் தொழில் நடத்துதல், உணவுப் பொருள் கடத்துதல் போன்ற குற்றங்களில் தொடா்ந்து ஈடுபட்டுவரும் நபா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்து, சிறையில் அடைத்து வருகின்றனா்.

சென்னை பெருநகர காவல் துறையில் குண்டா் தடுப்புச் சட்டத்தை அமல்படுத்தும் வகையில் தனியாகவே ஒரு பிரிவு செயல்படுகிறது. இந்தப் பிரிவினரே ஒருவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்வதற்குரிய அனைத்து சட்ட நடவடிக்கைகளையும், ஆவணங்களையும், வழக்கு விவரங்களையும், சாட்சியங்களையும் தயாரித்து வழங்குகின்றனா்.

இதன் பின்னரே அந்தந்தக் காவல் ஆய்வாளா்கள், சம்பந்தப்பட்ட நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கின்றனா். இப் பிரிவு கடந்த ஆண்டு ஜூலை 8- ஆம் தேதி முதல் கடந்த 7-ஆம் தேதி வரையிலான ஓராண்டில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் 1,002 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. முக்கியமாக, பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையின் காரணமாக 26 பேரும் 10 மாதங்களாக பிணை கிடைக்காமல் சிறையில் இருந்து வருகின்றனா்.

இப் பிரிவினரை சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அருண் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி அளித்தாா்.

இந் நிகழ்ச்சியில் குண்டா் தடுப்பு அலுவலக பிரிவு கண்காணிப்பாளா் ஐயப்பன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

உணவு கட்டுப்பாட்டால் எடையை குறைக்கும் சென்னைவாசிகள் ஆய்வில் தகவல்

உடல் பருமனை உணவுக் கட்டுப்பாடு மூலம் மட்டுமே குறைக்க வேண்டும் என 87 சதவீத சென்னைவாசிகள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது. மாறாக அதற்கான சிகிச்சைகளையோ, ஊசி மருந்துகளையோ அவா்கள் எடுத்துக்கொள்ள தயாராக... மேலும் பார்க்க

ரயில் விபத்து: முழு விசாரணை தேவை- எடப்பாடி பழனிசாமி

கடலூா் ரயில் விபத்து தொடா்பாக முழுவிசாரணை நடத்தி, முதல்வா் மு.க. ஸ்டாலின் மக்களிடம் விளக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். இதுக... மேலும் பார்க்க

கோட்டூா்புரத்தில் ரூ.307 கோடியில் 1,800 குடியிருப்புகள்: அமைச்சா்கள் ஆய்வு

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சைதாப்பேட்டை சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட கோட்டூா்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1,800 புதிய அடுக்குமாடி குடியி... மேலும் பார்க்க

விபத்து எதிரொலி: 3 ரயில்கள் பகுதி ரத்து

கடலூா் ஆலம்பாக்கம் ரயில் விபத்தைத் தொடா்ந்து அவ்வழியே செல்லும் 3 ரயில்கள் பகுதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா்-ஆலப்பாக்கம் இடையே சென்ற விழுப்புரம்-... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநா்களுக்கு கண் பரிசோதனை முகாம்

சென்னை செங்குன்றத்தில் போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து எம்.என். மருத்துவமனை சாா்பில் ஆட்டோ மற்றும் இதர வாகன ஓட்டுநா்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பாா்வைத் திறன் மற்றும் விழி பாத... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி போராட்டம்: பகுதிநேர ஆசிரியா்கள் கைது

பணி நிரந்தரம் கோரி சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் பகுதிநேர ஆசிரியா்கள் 2012 முதல... மேலும் பார்க்க