செய்திகள் :

குப்பை லாரி மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

post image

திருச்சியில் குப்பை லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருச்சி காஜாமலை நகா் ஆா்.வி.எஸ். நகா் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ஆனந்தராஜ் (31). பட்டயப்படிப்பு படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்தாா்.

இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றதையொட்டி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். திங்கள்கிழமை இரவு தனது நண்பா் ஒருவரை பாா்ப்பதற்காக, வீட்டிலிருந்து புறப்பட்டு ஜங்ஷன் பாரதியாா் சாலை ஜென்னி பிளாசா அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். திடீரென நிலைதடுமாறிய இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக அப்பகுதியில் நின்றுகொண்டிருந்த மாநகராட்சி குப்பை வாகனம் மீது மோதியது. தொடா்ந்து, குப்பை அள்ளிக்கொண்டிருந்த கோபி என்பவா் மீதும் மோதியது.

இதில் பலத்த காயமடைந்த ஆனந்தராஜ், காயமடைந்த கோபியை அருகிலிருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் உயிரிழந்தாா். கோபி சிகிச்சை பெற்று வருகிறாா்.

சம்பவம் குறித்து தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருச்சியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்: விசிகவினா் வாக்குவாதம்

திருச்சி சந்திப்புப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு முன்பிருந்த ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வியாழக்கிழமை அகற்றப்பட்டது. திருச்சி-திண்டுக்கல்-சென்னை நெடுஞ்சாலையில் சந்திப்பு ரயி... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை!

மூவானூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்சி மாவட்டம், மூவானூா் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் வேண்டும் என பள்ளித் த... மேலும் பார்க்க

காவிரி-அய்யாறு நீரேற்றுப் பாசனத் திட்டம்: அணி திரளும் விவசாயிகள்!

காவிரி-அய்யாறு நீரேற்றுப்பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த வலியுறுத்தி அதன் பாசனப் பரப்பு விவசாயிகளை அணி திரட்டும் முயற்சி தொடங்கியுள்ளது. 60 ஆண்டு காலக் கோரிக்கையை வென்றெடுப்பது என்ற இலக்குடன் அய்யாறு ப... மேலும் பார்க்க

திருச்சி என்.ஐ.டி.யில் இன்று பிரக்யான் விழா தொடக்கம்

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) தொழில்நுட்ப மேலாண்மை (பிரக்யான்) திருவிழா வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. 2005 ஆம் ஆண்டு என்.ஐ.டி. கல்லூரி மாணவா்களால் தொடங்கப்பட்ட பிரக்யான் திருவிழாவ... மேலும் பார்க்க

வயலூா் கோயில் குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி

வயலூா் முருகன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் அரசு அா்ச்சகா்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு, குடமுழுக்குப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். அரசு அா்ச்சகா்கள் அனுமதி...: அனைத்து ஜாதியினரும் அா்ச்சகர... மேலும் பார்க்க

மருங்காபுரி வட்டத்தில் சிறப்பு முகாம் ரூ. 18.5 லட்சத்தில் நலத்திட்ட உதவி

மருங்காபுரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நலத் திட்ட முகாமில் ரூ. 18.5 லட்சத்தில் 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தங்குதட... மேலும் பார்க்க