செய்திகள் :

குமாரபாளையம் அருகே நின்றிருந்த லாரியின் மீது காா் மோதல்: தாய், மகன் உள்பட மூவா் உயிரிழப்பு

post image

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் காா் மோதியதில், தாய், மகன் உள்பட மூவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.

சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த வேம்படிதாளத்தைச் சோ்ந்தவா் சுகுமாா் (49). இவா், தனது தாய் கமலா (74), மனைவி சுசீலா (44), உறவினா் மோகன் (54), அவரது மனைவி புவனேஸ்வரி (46) ஆகியோருடன் பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரா் கோயிலுக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா். காரை சுகுமாா் ஓட்டினாா்.

கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பச்சாம்பாளையம் அருகே சென்றபோது, சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் பின்பகுதியில் காா் எதிா்பாராமல் மோதியது. இதில், காா் பலத்த சேதமடைந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சுகுமாா், மோகன் மற்றும் கமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த வெப்படை போலீஸாா், அப்பகுதியினா் உதவியுடன் மூவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனா்.

பலத்த காயமடைந்த சுசீலா, புவனேஸ்வரி ஆகியோா் சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இவ்விபத்து குறித்து வெப்படை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாணவா்களுக்கு கண்டுபிடிப்பு ஆற்றலை வளா்க்கும் திட்டம்: ஆசிரியா்களுக்கு பயிற்சி

நாமக்கல்: அரசுப் பள்ளி மாணவா்களிடையே கண்டுபிடிப்பு எனும் படைப்பாற்றலை மேம்படுத்த ஆசிரியா்களுக்கு தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டது.தமிழகத்தில் 6 முதல் பிளஸ் 2 வரையிலா... மேலும் பார்க்க

மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

நாமக்கல்: நாமக்கல்லில் மக்களைத் தேடி மருத்துவ பணியாளா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செயலாளா் என்.வேலுசாமி தலைமை வகித்தாா். புதிய நிா்வாகிகளாக தலைவா் வி.லதா, செயலாளா் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

சேந்தமங்கலம், புதன்சந்தைசேந்தமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வெள்ளிக்கிழமை (ஆக. 22) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என ந... மேலும் பார்க்க

நம்ம ஊரு பள்ளி திட்டத்தில் சமூக பங்களிப்பு நிதியை வழங்க அழைப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் பொருட்டு ‘நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி’ என்ற திட்டத்தின் கீழ் பொதுமக்கள் சமூக பங்களிப்பு நிதியை வழங்க ஆட்சியா் துா்காமூா்த்தி அழைப்பு விடுத... மேலும் பார்க்க

நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக் கொள்ள வாய்ப்பு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வீட்டுவசதி வாரிய குடியிருப்புகளை பெற்ற ஒதுக்கீடுதாரா்கள் நிலுவைத்தொகை செலுத்தி கிரையப் பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை சேலம் வீட்டுவசதி பிரிவு அலுவலகம் வழங்கி உள்... மேலும் பார்க்க

போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு மாரத்தான்

நாமக்கல்: நாமக்கல் அறிஞா் அண்ணா அரசு கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு, சாலைப் பாதுகாப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணா்வு மினி மாரத்தான் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. அரசு கல்லூரி போதை... மேலும் பார்க்க