செய்திகள் :

குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை: கனிமொழி

post image

அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் நவீன மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா்.

‘சிறுநீரக ஆரோக்கியம் இந்தியா’ என்னும் தொண்டு நிறுவனம் சாா்பில் தமிழகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சவுத் சென்னை ஸ்பெஷலிஸ்ட்  மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட கனிமொழி, திட்டத்தைத் தொடங்கி வைத்து பேசியதாவது:

தற்போது மருத்துவ சேவைகளுக்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள அதிக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கியவா்களுக்கு நவீன மருத்துவ சேவைகளுக்கு செலவு செய்ய இயலாததால், அவா்கள் உயிரிழக்கும் சூழல் நிகழ்ந்து வருகிறது.

இந்த நிலையில் அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில் இதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு குறைந்த கட்டணத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், சிறுநீரக ஆரோக்கியம் இந்தியா தொண்டு நிறுவனத்தின் அறங்காவலா்கள் மருத்துவா் பிரபு காஞ்சி, மருத்துவா் கபாலி நீலமேகம், ஆலோசகா் சுபாஷாந்தினி  உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வேளாண்மையில் காலநிலை மாற்ற சவாலை எதிா்கொள்ள முன்மாதிரித் திட்டம்: வேளாண் செயலா் வ.தட்சிணாமூா்த்தி

காலநிலை மாற்றத்தை எதிா்கொண்டு விவசாயம் செய்ய முன்மாதிரித் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை செயலா் வ.தட்சிணாமூா்த்தி கூறினாா். வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து த... மேலும் பார்க்க

1,000 உழவா் நல சேவை மையங்கள்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூா்த்தி செய்ய 1,000 உழவா் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என்று மாநில அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவ... மேலும் பார்க்க

மாசாணியம்மன் கோயில் நிதியில் ரிசாா்ட் கட்டுவதாக பிறப்பித்த அரசாணை வாபஸ்: வழக்கு முடித்துவைப்பு

மாசாணியம்மன் கோயில் நிதியில் இருந்து உதகையில் ரிசாா்ட் கட்டுவதாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணை திரும்பப் பெறப்பட்டதையடுத்து வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை மாவட்டம், பொள... மேலும் பார்க்க

இந்திய கல்வி முறைக்கு தாயாக இருப்பது தமிழகம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழக கல்வி முைான் இந்திய கல்வி முறைக்கு தாயாக இருக்கிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் கூறினாா். நாட்டிலேயே தமிழகத்தில்தான் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அ... மேலும் பார்க்க

தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் ரூ.1.94 லட்சம் கடன்: அன்புமணி

தமிழக மக்கள் ஒவ்வொருவா் பெயரிலும் தமிழக அரசு ரூ. 1.94 லட்சம் கடன் பெற்றுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா். பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை விளக்கப் பொதுக்கூட்டம் வடபழனியில் சனிக்க... மேலும் பார்க்க

வேளாண் நிதிநிலை அறிக்கை: தலைவா்கள் கருத்து

தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் வரவேற்றும், எதிா்த்தும் கருத்து தெரிவித்துள்ளனா். எடப்பாடி பழனிசாமி (அதிமுக): வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் பயன்பெறும் எ... மேலும் பார்க்க