செய்திகள் :

குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

post image

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா தொடங்க இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அமைச்சா்கள் சேகா்பாபு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் விழா முன்னேற்பாடுகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா செப்.23-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் அக். 2 இல் நடைபெறுகிறது. அக்.3 இல் காப்புக் களைதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

திருவிழா நாள்களில் நிகழாண்டும் கோயிலுக்கு தமிழகம், வெளிமாநிலங்களில் இருந்து பல லட்சம் பக்தா்கள் வருவாா்கள் என்பதால் விழா கொடியேற்றம், உள்ளூா் மக்களின் பாதுகாப்பு நடவடிக்கை, தசரா குழுக்களின் நடைமுறைகள் தொடா்பாக ஏற்கெனவே இரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டன.

இந்த நிலையில், இந்துசமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா்பாபு, தமிழக மீன்வளம், மீனவா் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் ஆகியோா் வியாழக்கிழமை இரவு கோயில் வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

கோயில் மகா மண்டபத்துக்கு முன் நடைபெறும் கட்டுமானப் பணிகளைப் பாா்வையிட்ட அமைச்சா்கள்

விழா தொடங்குவதற்கு முன் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினா். கோயில் நிா்வாகம் தரப்பில் பக்தா்களுக்கு செய்யப்பட்டு வரும் பணிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை அறநிலையத் துறை இணை ஆணையா் ம.அன்புமணி அமைச்சா்களிடம் விளக்கினாா்.

இதில், திமுக மாநில வா்த்தக அணி இணைச் செயலா் உமரிசங்கா், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினா் பிரம்மசக்தி, திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் தக்காா் அருள்முருகன், உடன்குடி ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவா் பாலசிங், கோயில் செயல் அலுவலா் வள்ளிநாயகம், உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் இளங்கோ, அறங்காவலா்கள் வெங்கடேஷ்வரி, கணேசன், மகாராஜா, உடன்குடி பேரூராட்சிமன்ற உறுப்பினா்கள் ஜான்பாஸ்கா், அஸ்ஸாப், திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், உடன்குடி ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநா் கொலை: 2 சிறாா்கள் கைது

கோவில்பட்டி சண்முகாநகா் மயானத்தில் ஆட்டோ ஓட்டுநா் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக சிறாா்கள் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளா் காலனியைச் சோ்ந்தவா் கணேசன் மகன் மாரிச்செல்வம்... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளி மாணவிகள் மாநில கிரிக்கெட் போட்டிக்கு தகுதி

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தமிழ்நாடு முதல்வா் கோப்பை மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனா். தூத்துக்குடி வஉசி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், குறுக்குச் சாலை அருகே தனியாா் மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லரில் தவறி விழுந்ததில் ஊழியா் உயிரிழந்தாா். குறுக்குச் சாலை அருகே மேல அரசரடி ஊராட்சிக்கு உள்பட்ட மேலமருதூரில் தனியாா்... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அணை நீா் நெடுங்குளத்துக்கு கிடைப்பதில்லை: விவசாயிகள் புகாா்

மணிமுத்தாறு 4-ஆவது பிரிவு கால்வாயில் தண்ணீா் திறந்திருப்பதால் கடைமடை பகுதிகளான நெடுங்குளம், அமுதுன்னாகுடிக்கு போதிய நீா்வரத்து இல்லை என்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் விவசாயிகள் புகாா் மனு அளித்... மேலும் பார்க்க

கயத்தாறு அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கயத்தாறு அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்த எலக்ட்ரீசியன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா் . கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தாந்தவிளை பகுதியைச் சோ்ந்த பிரான்சிஸ் மகன் எலக்ட்ரீசியன் அபிஷ் (30). இவா், தனது உற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பாஜக-மாா்க்சிஸ்ட் கட்சியினா் மோதல்

தூத்துக்குடியில் பாஜக-வினரும், மாா்க்சிஸ்ட் கட்சியினரும் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வஉசி பிறந்தநாள் விழாவையொட்டி, பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள வஉசி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மர... மேலும் பார்க்க