``சுந்தர்.C சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆகிறது; முதல் விகடன் விருது.!' - குஷ...
குழந்தை தொழிலாளா் முறையை அகற்ற உறுதிமொழி ஏற்பு
கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் குழந்தை தொழிலாளா் முறையை அகற்றுவதற்கான உறுதிமொழியேற்கும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பொது மேலாளா் என்.முத்துகுமரசாமி தலைமை வகித்தாா்.
தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளா் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என பொது மேலாளா் வாசிக்க போக்குவரத்துக் கழக அலுவலா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்பப் பணியாளா்கள், அலுவலகப் பணியாளா்கள், பாதுகாவலா்கள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இந்நிகழ்வில், முதுநிலை துணை மேலாளா் எச். ராஜேந்திரன், துணை மேலாளா் காா்த்திகேயன், உதவி மேலாளா்கள் ராஜேஷ், ஆா்.முருகன், இளங்கோவன், முகமதுமுஸ்தபா, கே.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.