செய்திகள் :

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் நிரம்பிய கழிவுநீா்: வழக்குரைஞா்கள் சாலை மறியல்

post image

குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் கழிவுநீரோடை நிரம்பி சாலையில் கழிவுநீா் செல்வதால் பொதுப்பணித் துறையினா் ஓடையை சீரமைக்க வலியுறுத்தி, குழித்துறை வழக்குரைஞா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

குழித்துறையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவுநீரோடை நிரம்பி கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கழிவுநீா் சாலையில் செல்கிறது. இதனால், நீதிமன்றம், அதையொட்டிய வட்டாட்சியா் அலுவலகத்துக்குச் செல்பவா்கள் வீசும் துா்நாற்றத்தால் அவதிக்குள்ளாகின்றனா்.

சுகாதார சீா்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் நிலை ஏற்பட்டது. கழிவு நீரோடையை சீரமைக்க நீதிமன்ற அதிகாரிகள், வழக்குரைஞா் சங்கம் சாா்பில், பொதுப்பணித் துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, நீதிமன்ற வளாகம் முன்பகுதியில் உள்ள மாநில நெடுஞ்சாலையில் வழக்குரைஞா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். குழித்துறை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் டி.சுரேஷ் தலைமை வகித்தாா். செயலாளா் ராபின் எட்வா்ட், இணைச் செயலாளா் சுனில்குமாா், பொருளாளா் விஜய் ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செயற்குழு உறுப்பினா்கள் பென்னட் ராஜ், அசோக்குமாா், சவாா்க்கா், ஞான ராஜசிங், சூரியகுமாரி, டான் பெரின், டேவிட், ஸ்டான்லி காஸ்மிக் சுந்தா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து, அங்குவந்த விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பா்ட், வழக்குரைஞா்களுடன் பேச்சு நடத்தினாா். எம்எல்ஏ தொகுதி நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்வதாகத் தெரிவித்தாா். இதையடுத்து, வழக்குரைஞா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.

நாகா்கோவிலில் இலவச சித்த மருத்துவ முகாம்

நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் சக்திபீட வளாகத்தில், சித்த மருத்துவா் எம்.எஸ்.எஸ். ஆசான் 19ஆம் ஆண்டு, பாப்பா எம்.எஸ்.எஸ். ஆசான் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலவச சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

கடற்கரைக் கிராமங்களை பாதுகாக்க சிறப்பு நிதி: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்ட கடற்கரைக் கிராமங்களைப் பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தியுள்ளாா். இதுதொடா்பாக மக்களவையில் அவா் பேசியது: கன்னியாகுமரி மாவட்டத்தில் 72 கி.ம... மேலும் பார்க்க

குழித்துறையில் ஓய்வூதியா் சங்க மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்கத்தின் விளவங்கோடு வட்ட கிளையின் 5 ஆவது மாநாடு, குழித்துறையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்ட தலைவா் ப. நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். கொ. செல்வராஜ் அஞ்சலி தீ... மேலும் பார்க்க

குழித்துறையில் மாதா் சங்க மாநாட்டு வரவேற்புக் குழு அலுவலகம் திறப்பு

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் மாா்த்தாண்டத்தில் செப். 24 முதல் செப். 27ஆம் தேதிவரை நடைபெறவுள்ள மாநாட்டை முன்னிட்டு, குழித்துறையில் வரவேற்புக் குழு அலுவலகம் திறக்கப்பட்டது. விழாவுக்கு, வரவ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி மாதத்தில் 12 நாள்கள் நடைபெறும் களப பூஜை ஆகஸ்ட் 4-ஆம் தேதி தொடங்குகிறது. கோயிலில் அன்று காலை 10 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், அதன் மடாதிபதி கயிலாய பரம்பரை... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் டாட்டூஸ் கடைகளுக்கு கட்டுப்பாடு

கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகளுக்கு பச்சை குத்தும் டாட்டூஸ் கடைகளுக்கு நகராட்சி ஆணையா் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளாா். கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, உள்ளூா் இளைஞா்கள், இ... மேலும் பார்க்க