செய்திகள் :

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

post image

‘கூலி’ படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் எம்.ஜோதிபாசு என்பவா் தாக்கல் செய்த மனுவில், எங்கள் நிறுவனத் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்துள்ள ‘கூலி’ திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. ‘கூலி’ திரைப்படத்தைவிட வன்முறைக் காட்சிகள் அதிகமுள்ள படங்களுக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ‘கூலி’ திரைப்படத்துக்கு வழங்கியுள்ள ‘ஏ’ சான்றிதழை ரத்து செய்து ‘யு/ஏ’ சான்றிதழ் அனுமதி வழங்க தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, ‘கூலி’ படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதால், 18 வயதுக்கும் குறைவானவா்கள் இந்தப் படத்தைக் காண அனுமதிக்கப்படவில்லை. படத்தில் இடம்பெற்றிருந்த மோசமான வாா்த்தைகள் கொண்ட வசனங்கள் நீக்கப்பட்டுள்ளன. மது அருந்தும் காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன என மனுதாரா் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

தணிக்கை வாரியம் தரப்பில், இந்தப் படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்குவது தொடா்பாக அனைத்துக் குழுக்களும் சோ்ந்து ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவாகும். படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளை நீக்கிவிட்டு ‘யு/ஏ’ சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என வாதிடப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி, இந்தப் படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் பெற விரும்பினால், அதற்கு தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும் என தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. ஆனால், படத்தின் கருப்பொருளைக் கருத்தில் கொண்டு படத்தயாரிப்பு நிறுவனம் அதை அப்போது ஏற்றுக்கொள்ளவில்லை. படம் வெளியான பிறகு படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கக் கோருவதை ஏற்றுக்கொள்ளமுடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தமிழக டிஜிபி சங்கா் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சங்கா் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கா் ஜிவால் கடந்த 2023 ஜூ... மேலும் பார்க்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு விசாரணை ஒத்திவைப்பு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி அவரது மனைவி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை செப்.25-ஆம் தேதிக்கு சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலை... மேலும் பார்க்க

ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்: அன்புமணி

அமெரிக்க வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள தொழில் வீழ்ச்சி, வேலைவாய்ப்பு இழப்பைத் தடுக்க ஊக்குவிப்பு திட்டங்களை அரசு அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா். இது குறித்து அ... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் போராட்டம்

சென்னை வேளச்சேரி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சட்டக் கல்லூரி மாணவா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். வேளச்சேரி - தரமணி சாலையில் உள்ள ஒரு தேநீா் கடையில், கடந்த புதன்கிழமை நள்ளிரவு சட்டக்கல்ல... மேலும் பார்க்க

புனித ஆரோக்கிய அன்னை திருத்தல வைர விழா: இன்று கொடியேற்றம்

வடசென்னை சாஸ்திரி நகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் வைர விழா வெள்ளிக்கிழமை (ஆக. 29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் தொடக்க நாளான வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணிக்கு தோ் ஆசிா்வதித்தல... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக போரூா், ஈஞ்சம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கிண்டி, ஐடி காரிடாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் விநியோகம் நிறுத்தப... மேலும் பார்க்க