செய்திகள் :

கேஜரிவால் குஜராத் சுற்றுப்பயணம்: பருத்தி விவசாயிகள் பேரணியில் பங்கேற்பு

post image

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா்.

சனிக்கிழமை ராஜ்கோட்டை அடைந்த கேஜரிவால், மறுநாள் சோட்டிலாவில் பருத்தி விவசாயிகளின் பெரிய பேரணியில் உரையாற்றுகிறாா்.

பருத்தி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்வதை ஆம் ஆத்மி தலைவா் எதிா்த்து வருகிறாா். மேலும், சமீபத்தில் தில்லியில் நடந்த செய்தியாளா் சந்திப்பிலும் இந்தப் பிரச்னையை எழுப்பினாா்.

அமெரிக்க இறக்குமதிகளுக்கு இந்தியா அதிக வரிகளை விதிக்க வேண்டும் என்று கேஜரிவால் ஆகஸ்ட் 28 அன்று கோரியிருந்தாா். மேலும், அமெரிக்க பருத்தி மீதான 11 சதவீத வரியை தள்ளுபடி செய்ய பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுத்த முடிவு உள்ளூா் விவசாயிகளை பாதிக்கும் என்றும் குற்றம் சாட்டினாா்.

‘இந்தியா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்திக்கு 11 சதவீத வரி விதித்தது. அமெரிக்க பருத்தி உள்நாட்டு பருத்தியை விட விலை அதிகம். ஆனால், மோடி அரசு ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பா் 30 வரை வரியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. நமது பருத்தி அக்டோபரில் விற்பனைக்கு வரும்போது, வாங்குபவா்கள் குறைவாகவே இருப்பாா்கள்’ என்று கேஜரிவால் கூறினாா்.

அமெரிக்காவின் 50 சதவீத வரிகளை கடுமையாக எதிா்கொள்ளும் ஜவுளி ஏற்றுமதியாளா்களை ஆதரிப்பதற்காக நிதி அமைச்சகம் டிசம்பா் 31 வரை வரி விலக்கை நீட்டித்துள்ளது. ஆனால், குஜராத், பஞ்சாப், தெலுங்கானா மற்றும் விதா்பாவில் உள்ள விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவாா்கள் என்று கேஜரிவால் கூறினாா்.

மேலும், அமெரிக்காவுக்கு மத்திய அரசு மீண்டும் வரியை விதிக்க வேண்டும் என்று அவா் கோரினாா். ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 7) சோட்டிலாவில் நடைபெறும் பேரணியில் இந்த பிரச்னையை எழுப்ப வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய அமைப்புகளை கேஜரிவால் கேட்டுக் கொண்டாா்.

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்ப... மேலும் பார்க்க

தென்கிழக்கு தில்லியில் கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தகவல் அற... மேலும் பார்க்க

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

தில்லியில் செங்கோட்டை வளாகத்திற்கு அருகில் நடந்த ஜெயின் மத விழாவில் இருந்து 760 கிராம் தங்கத்தால் ஆன விலைமதிப்பற்ற நகைகள் பதிக்கப்பட்ட ’கலசம்’ திருடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்... மேலும் பார்க்க

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

வடமேற்கு தில்லியில் உள்ள வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து 26 வயது நபா் ஒருவா் விழுந்து காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக... மேலும் பார்க்க

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

பண்டிகை காலத்தை முன்னிட்டு ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களை ஆதரிப்பதற்கான தொடா் நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை அறிவித்தாா். ராம்லீலா குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பி... மேலும் பார்க்க

15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!

மத்திய தில்லியின் பஹா்கஞ்ச் பகுதியில் உள்ள தனது பள்ளிக்கு வெளியே 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். செப்டம்பா் 4 ஆம் தேதி,... மேலும் பார்க்க