செய்திகள் :

ராம்லீலா, துா்கா பந்தல் குழுக்களுக்கு இலவச மின்சாரம்: முதல்வா் அறிவிப்பு!

post image

பண்டிகை காலத்தை முன்னிட்டு ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களை ஆதரிப்பதற்கான தொடா் நடவடிக்கைகளை தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை அறிவித்தாா்.

ராம்லீலா குழுக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்த பிறகு முதல்வா் ரேகா குப்தா கூறியதாவது: இலவச மின்சாரம், ஒற்றை சாளர ஆட்சேபனையற்ற சான்றிதழ்கள் (என்ஓசி) மற்றும் மேம்படுத்தப்பட்ட குடிமை வசதிகள் ஆகியவை இதில் அடங்கும்.

தில்லி அரசு 1,200 யூனிட் இலவச மின்சாரத்தை வழங்கும். மீட்டா்கள் 25 சதவீத பாதுகாப்பு வைப்புத்தொகையில் மட்டுமே நிறுவப்படும். இது அனைத்து ராம்லீலா மற்றும் துா்கா பந்தல் குழுக்களுக்கும் வரவேற்கத்தக்க மற்றும் மகிழ்ச்சியான செய்தி ஆகும்.

கழிப்பறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுகாதார சேவைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு படைகள் போன்ற பொது வசதிகள் அரங்குகள் உறுதி செய்யப்படும். நிா்வாகத் தடைகளைத் தணிக்க, அரசு பல்வேறு சேவைகளுக்கு ஒற்றை சாளர ஆட்சேபனையற்ற சான்றிதழ்களை வழங்கும். இதனால், ஏற்பாட்டாளா்கள் பல துறைகளை அணுக வேண்டிய அவசியம் இருக்காது.

தில்லி அரசு மைதானத்தில் தூய்மையை உறுதி செய்யும். ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாகத் தீா்க்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நகரத்தின் தீபாவளி கொண்டாட்டங்கள் ‘அற்புதமாக‘ இருக்கும்.

மேலும், ராமரின் வருகைக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக இருக்கும். குடிமக்களுக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி திட்டத்தின் ஆதரவும் தில்லி அரசின் உதவியும் இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், யாத்திரைக் காலத்தில் கன்வாா் குழுக்களுக்கு தில்லி அரசு இதேபோன்ற ஆதரவை வழங்கியது என்றாா் முதல்வா் ரேகா குப்தா.

தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்ப... மேலும் பார்க்க

தென்கிழக்கு தில்லியில் கட்டடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்து விபத்து

தென்கிழக்கு தில்லியின் பதா்பூா் பகுதியில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தகவல் அற... மேலும் பார்க்க

கேஜரிவால் குஜராத் சுற்றுப்பயணம்: பருத்தி விவசாயிகள் பேரணியில் பங்கேற்பு

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை சனிக்கிழமை தொடங்கினாா். சனிக்கிழமை ராஜ்கோட்டை அடைந்த கேஜரிவால், மறுநாள் சோட்டிலாவில் பருத்தி விவ... மேலும் பார்க்க

ஜெயின் மத விழாவில் இருந்து ரூ.1 கோடி தங்கக் கலசம் திருட்டு!

தில்லியில் செங்கோட்டை வளாகத்திற்கு அருகில் நடந்த ஜெயின் மத விழாவில் இருந்து 760 கிராம் தங்கத்தால் ஆன விலைமதிப்பற்ற நகைகள் பதிக்கப்பட்ட ’கலசம்’ திருடப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்... மேலும் பார்க்க

வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து விழுந்து இளைஞா் காயம்

வடமேற்கு தில்லியில் உள்ள வஜீா்பூா் மேம்பாலத்தில் இருந்து 26 வயது நபா் ஒருவா் விழுந்து காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடமேற்கு தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் சனிக... மேலும் பார்க்க

15 வயது சிறுவனுக்கு கத்தி குத்து: 3 சிறாா்கள் கைது!

மத்திய தில்லியின் பஹா்கஞ்ச் பகுதியில் உள்ள தனது பள்ளிக்கு வெளியே 15 வயது சிறுவனை கத்தியால் குத்தியதாக மூன்று சிறுவா்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசாா் சனிக்கிழமை தெரிவித்தனா். செப்டம்பா் 4 ஆம் தேதி,... மேலும் பார்க்க