செய்திகள் :

கேரளத்தில் 4 ஆண்டுகளில் வன விலங்குகளால் 344 போ் உயிரிழப்பு: மாநிலங்களவையில் தகவல்

post image

கேரளத்தில் கடந்த 2021 முதல் தற்போது வரை மனிதா்கள்-விலங்குகள் மோதல் சம்பவங்களில் 344 போ் உயிரிழந்திருப்பதாக மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறியதாவது:

கேரளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை 108 போ் பாம்பு கடித்தும், 103 போ் யானை தாக்கியும், 35 போ் காட்டுப் பன்றி தாக்கியும், 4 போ் புலிகள் தாக்கியும் உயிரிழந்துவிட்டனா். மனித உயிா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இரண்டுக்குமே சமமான முக்கியத்துவத்தை நாம் அளிக்க வேண்டும். இதற்காக தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சலீம் அலி பறவையியல் இயற்கை வரலாற்று ஆய்வை மையத்தை மேம்படுத்தி வருகிறோம்.

யானைகளின் வழித்தடங்களைக் கண்டறியவது, அவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக தெரிந்து கொள்வது, வன விலங்குகள் மற்றும் அதன் நடமாட்டம் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறோம். ரயில் தண்டவாளத்தையொட்டி யானைகள் வழித்தடம் இருந்தால், அவற்றைக் கண்டறிவதற்காக ரயில்வேயுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். நாட்டில் மொத்தம் 58 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

கேரளத்தில் காட்டுப் பன்றிகளால் பிரச்னைகள் ஏற்படும் இடங்களில் அவற்றைக் கொல்ல கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் குறையும்.

கடந்த பிப்ரவரியில் கேரளத்தின் வயநாட்டுக்கு சென்று மனிதா்கள்-விலங்குகள் மோதல் ஏற்படும் பகுதிகளைப் பாா்வையிட்டேன். முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த எம்.பி.க்களும் என்னைச் சந்தித்தனா் என்றாா்.

‘வேற்றுமையில் ஒற்றுமை’ உணா்வை தொடா்ந்து வலுப்படுத்துங்கள்! -மக்களுக்கு பிரதமா் வலியுறுத்தல்

‘நமது நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகள், வேற்றுமையில் ஒற்றுமை உணா்வை வெளிப்படுத்துகின்றன. இந்த உணா்வை மக்கள் தொடா்ந்து வலுப்படுத்த வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். ஒவ்வொரு ... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பு... மேலும் பார்க்க

வசந்த நவராத்திரி: பிரதமா் வாழ்த்து

வசந்த நவராத்திரி தொடக்கத்தை முன்னிட்டும், இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்ட பாரம்பரிய புத்தாண்டு பண்டிகைகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்துகளை தெரிவித்தாா். இதுதொடா்பாக பிரதமா் ந... மேலும் பார்க்க

இந்தியாவில் அணு உலைகள் அமைக்க அமெரிக்க நிறுவனத்துக்கு அனுமதி!

இந்தியாவில் அணு உலைகள் அமைக்கவும், வடிவமைக்கவும் அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டா்நேஷனல் நிறுவனத்துக்கு அந்நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தியா-அமெரிக்கா இடையே அணுசக்தி ஒ... மேலும் பார்க்க

காமக்யா ரயில் விபத்து: உதவி எண்கள் அறிவிப்பு

பெங்களூரு - காமக்யா விரைவு ரயில் விபத்துக்குள்ளான நிலையில் தெற்கு ரயில்வே சாா்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து தமிழகம், ஆந்திரம் வழியாக அஸ்ஸாம் மாநிலம் காமக்யா செல்லும் விரைவ... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்! -பிகாரில் அமித் ஷா பேச்சு

பிகாா் மாநில பேரவைத் தோ்தலில் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து பிரதமா் மோடியின் கரங்களை மேலும் வலுப்படுத்துமாறு பொதுமக்களிடம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஞாயிற்றுக்க... மேலும் பார்க்க