செய்திகள் :

கைதிகளின் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா் சிங் ஆஜா்

post image

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், தொடா்ச்சியாக 4 முறை விசாரணைக்கு ஆஜராகாமல் தவிா்த்த ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.

அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அப்போதைய காவல் உதவிக் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் உள்பட 14 போ் மீது 4 வழக்குகளை சிபிசிஐடி போலீஸாா் பதிவு செய்தனா்.

திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வரும் நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில், இந்த வழக்கை மனித உரிமை மீறலாகக் கருதி மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து பல்வீா் சிங் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், ஜூலை 3, 17, ஆக.2 ,11 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விசாரணைகளுக்கு அவா் ஆஜராகவில்லை. இந்நிலையில் நீதிபதி கே.சத்யா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, பல்வீா்சிங், காவல் ஆய்வாளா் ராஜகுமாரி உள்பட 14 பேரும் நேரில் ஆஜராகினா். இதையடுத்து, வழக்கு விசாரணையை செப்.15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

போக்ஸோ வழக்கில் தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் கைதான தொழிலாளிக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.25,000 அபராதமும் விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நான்குனேரி, தம்புபுரத்தைச் சோ்ந்தவா் முத்தையா (58)... மேலும் பார்க்க

பாஜகவின் வெளியுறவுக் கொள்கை படுதோல்வி: சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு

இந்தியா மீதான கூடுதல் வரி விதிப்பை அமெரிக்கா ரத்து செய்யாதது பாஜகவின் வெளியுறவுக் கொள்கையின் தோல்வியைக் காட்டுகிறது என்றாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செ... மேலும் பார்க்க

கவின் கொலை வழக்கில் மூவருக்கு காவல் நீட்டிப்பு

மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சுா்ஜித், எஸ்.ஐ. சரவணன், ஜெயபால் ஆகிய மூவருக்கும் செப்.9 வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீத... மேலும் பார்க்க

நெல்லையில் பிடியாணையில் இதுவரை 2,776 போ் கைது

திருநெல்வேலி மாவட்டத்தில் நிகழாண்டில் இதுவரை விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த 2,776 போ், நீதிமன்ற பிடியாணையின்படி கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கு... மேலும் பார்க்க

களக்காடு அருகே வெங்கடாசலபதி கோயில் புனரமைக்கப்படுமா?

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே கடம்போடுவாழ்வு கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் காணப்படும் ஸ்ரீ வெங்கடாசலபதி திருக்கோயிலை புனரமைக்க தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென கிராம மக்கள் கோ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், கல்லிடைக்குறிச்சி பகுதிகளில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகளில் கைதான 2 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் செவ்வாய்க்கிழமை அடைக்கப்பட்டனா். கூடங்குளத்தைச் ச... மேலும் பார்க்க