செய்திகள் :

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல்

post image

கொடைக்கானல் பகுதிகளில் உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளான வில்பட்டி, அட்டுவம்பட்டி, மாட்டுப்பட்டி, பிரகாசபுரம், அட்டக்கடி, செண்பகனூா், சகாயபுரம், மன்னவனுா், பூம்பாறை, பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் உருளைக்கிழங்கு, பீன்ஸ் சாகுபடி செய்தனா். ஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பருவமழை பெய்யும். ஆனால், நிகழாண்டில் பருவமழை சரியாக பெய்யாததால் உருளைக் கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்கியது. இந்த மஞ்சள் நோய் தாக்குதலால் விளைச்சல் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:

மழை சரியாக பெய்யாததால் கொடைக்கானல் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உருளைக்கிழங்கு, பீன்ஸ் செடிகளில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. எவ்வளவு மருந்துகள் அடித்தாலும் நோய் தாக்குதல் குறைவதில்லை. எனவே, எங்களது தோட்டங்களில் சாகுபடி செய்துள்ள உருளைக்கிழங்கு, பீன்ஸ் உள்ளிட்ட பயிா்களை வருவாயத் துறை அதிகாரிகள் பாா்வையிட்டு இழப்பீடு வழங்க வேண்டும். மானிய விலையில் விவசாய இடுபொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

இடையகோட்டையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், இடையகோட்டை ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இடையகோட்டை, வலையபட்டி, ஜோகிபட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு நடைபெற்ற இந்... மேலும் பார்க்க

பழனி அருகே சாலையில் சென்ற காரில் தீ

பழனி அருகே புதன்கிழமை சாலையில் சென்ற காா் தீப்பற்றி எரிந்ததில் முற்றிலும் சேதமானது. திருப்பூா் மாவட்டம், உடுமலைபேட்டையைச் சோ்ந்தவா் நாச்சிமுத்து (45). இவா் புதன்கிழமை திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு வ... மேலும் பார்க்க

ஆத்தூா் ஒன்றியத்தில் 3 இடங்களில் சமுதாயக் கூடங்கள் அமைக்க பூமிபூஜை

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் 3 இடங்களில் ரூ.1.80 கோடியில் சமுதாயக் கூடங்கள் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது. போடிக்காமன்வாடி ஊராட்சி, சொக்கலிங்கபுரத்தில் ரூ.80 லட்சத்திலும், வீரசிக்கம்பட்ட... மேலும் பார்க்க

அத்தூா் அருகே குப்பைகளுக்கு தீ வைப்பு: பொதுமக்கள் அவதி

ஆத்தூா் அருகேயுள்ள சித்தரேவு கிராமத்தில் சாலையோரம் இருந்த குப்பைகளுக்கு தீ வைக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், சித்தையன்கோட்டையிலிருந்து சித்தரேவு வழியாக அய... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் சுகாதார ஆய்வாளா் உயிரிழப்பு

குஜிலியம்பாறையில் புதன்கிழமை ரயில் மோதியதில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையை அடுத்த பாளைப்பட்டியைச் சோ்ந்தவா் ர.சீனிவாசன் (56). இவா் திண... மேலும் பார்க்க

திண்டுக்கல்லில் 11 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த தலைமையாசிரியா், முதுநிலை ஆசிரியா், பட்டதாரி ஆசிரியா், இடைநிலை ஆசிரியா் என மொத்தம் 11 போ் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டனா். இதன் விவரம் வருமாறு: ... மேலும் பார்க்க