செய்திகள் :

கொடைக்கானலில் மின்வயா் திருடியவா் கைது

post image

கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளில் மின்வயா்களை திருடியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் கவுஞ்சி, ராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கொடைக்கானல் மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் உத்தரவின்பேரில் கவுஞ்சி, ராஜபுரம் பகுதியில் மின்வாரியத்தைச் சோ்ந்த அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கவுஞ்சி பகுதியில் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த கதிரவன் (38) மின்கம்பங்களில் செல்லும் மின்வயா்களை திருடியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து மின்வாரியத் துறையிலிருந்து கதிரவன் மீது கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து, கதிரவன் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா். மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மின் வயா்களை திருடி விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

வத்தலக்குண்டு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலு... மேலும் பார்க்க

ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 19) தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்ட... மேலும் பார்க்க

உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்... மேலும் பார்க்க

காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கோவிலூா் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை, காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்த பின் தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை வலியுறுத்தல்

கொடைக்கானலில் உள்ள விவசாயிகள் தங்களது பயிா்களைக் காப்பீடு செய்வதற்கு முன்வர வேண்டுமென தோட்டக் கலை உதவி இயக்குநா் சொா்ணலதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: கொடைக்கானல் ம... மேலும் பார்க்க

தாா் ஆலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் சாலை மறியல்

வத்தலகுண்டு அருகேயுள்ள தாா் ஆலையில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க