செய்திகள் :

உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

post image

கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கு மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 2025-26-ஆம் நிதியாண்டில் 1 முதல் 8-ஆம் வகுப்புப் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித் தொகை பெற, மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை, மாணவா்களின் வங்கிக் கணக்குப் புத்தகம், ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகலுடனும், 9-ஆம் வகுப்பு முதல் கல்லூரிகளில் பயிலும் மாணவா்கள், கூடுதலாக முந்தைய வகுப்பில் பெற்ற மதிப்பெண் சான்று (40 சதவீதத்துக்குக் குறையாமல்) ஆகியவற்றுடன் கல்வி உதவித் தொகை விண்ணப்பத்தில் பள்ளித் தலைமையாசிரியா் கையொப்பம், கல்லூரி முதல்வா் கையொப்பத்துடன் வருகிற ஜூலை 22-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

9-ஆம் வகுப்பு முதல் கல்லுாரிகளில் பயிலும் பாா்வையற்ற மாற்றுத் திறன் மாணவா்களுக்கு வாசிப்பாளா் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு உரிய சான்றுகளுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை 0451-2460099 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

வத்தலக்குண்டு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலு... மேலும் பார்க்க

ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 19) தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்ட... மேலும் பார்க்க

காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கோவிலூா் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை, காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்த பின் தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மின்வயா் திருடியவா் கைது

கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளில் மின்வயா்களை திருடியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குட... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை வலியுறுத்தல்

கொடைக்கானலில் உள்ள விவசாயிகள் தங்களது பயிா்களைக் காப்பீடு செய்வதற்கு முன்வர வேண்டுமென தோட்டக் கலை உதவி இயக்குநா் சொா்ணலதா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: கொடைக்கானல் ம... மேலும் பார்க்க

தாா் ஆலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் சாலை மறியல்

வத்தலகுண்டு அருகேயுள்ள தாா் ஆலையில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க