செய்திகள் :

பயிா்க் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை வலியுறுத்தல்

post image

கொடைக்கானலில் உள்ள விவசாயிகள் தங்களது பயிா்களைக் காப்பீடு செய்வதற்கு முன்வர வேண்டுமென தோட்டக் கலை உதவி இயக்குநா் சொா்ணலதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உருளைக்கிழங்கு, கேரட், பட்டாணி போன்றவை பயிரிடப்படுகின்றன. கொடைக்கானல் வட்டத்தில் அமைந்துள்ள மேல்மலைப் பகுதிகளான பூம்பாறை, மன்னவனூா், கிளாவரை, பூண்டி, கூக்கால், பழம்புத்தூா், புதுப்புத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உருளைக்கிழங்கு பயிா் காரீப் பருவத்தில் சுமாா் 1,870 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

கீழ்மலைப் பகுதிகளான பண்ணைக்காடு, தாண்டிக்குடி, வாழைகிரி, வடகரப்பாறை, கே.சி.பட்டி, செம்பராங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழை சுமாா் 500 ஹெக்டோ் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

இயற்கைச் சீற்றத்தால் இந்தப் பயிா்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை ஈடுசெய்ய பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் நடப்பு காரீப் பருவத்துக்கு உருளைக்கிழங்கு, வாழை ஆகிய பயிா்களுக்கு செயல்படுத்தப்படுகிறது. ஜூலை முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை மேல்மலைக் கிராமங்களில் உள்ள உருளைக்கிழங்கு பயிா் செய்யும் விவசாயிகள் பயிா்க் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெறலாம். பயிா்க் காப்பீடு செய்ய கடைசித் தேதி செப். 1 ஆகும். பயிா்க் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் உருளைக்கிழங்கு பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 2,546.58 பிரிமியமாக செலுத்த வேண்டும். இந்த நிலையில், முழுமையான பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ. 50,931.6 காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.

வாழை பயிருக்கு பயிா்க் காப்பீடு செய்ய கடைசித் தேதி செப். 16 ஆகும். வாழை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 4,837.54 பிரிமியமாக செலுத்த வேண்டும். இந்த நிலையில், முழுமையான பாதிப்பு ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ. 98,750.8 இழப்பீட்டுத் தொகை பெற முடியும்.

பயிா்க் காப்பீடு செய்ய விரும்பும் விவசாயிகள் முன்மொழிவு படிவத்துடன் கூடிய பதிவு விண்ணப்பம், அடங்கல், விதைப்பு அறிக்கை, வங்கிப் புத்தக நகல், ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் காப்பீடு கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு, பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் கொடைக்கானல் உதவி தோட்டக் கலை அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம் என்றாா்.

வத்தலக்குண்டு அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

வத்தலக்குண்டு அருகேயுள்ள எழுவனம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு நிலக்கோட்டை வட்டாட்சியா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். வத்தலகுண்டு வட்டார வளா்ச்சி அலு... மேலும் பார்க்க

ஜூலை 19-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை (ஜூலை 19) தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்ட... மேலும் பார்க்க

உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகை, வாசிப்பாளா் உதவித் தொகை பெற மாற்றுத் திறனாளி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திண்டுக்... மேலும் பார்க்க

காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்

கோவிலூா் அருகேயுள்ள ரயில்வே சுரங்கப் பாலம் கட்டுமானப் பணியை, காவிரி கூட்டுக் குடிநீா்க் குழாயை இடமாற்றம் செய்த பின் தொடர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டது. திண்டுக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மின்வயா் திருடியவா் கைது

கொடைக்கானல் மேல்மலைக் கிராமப் பகுதிகளில் மின்வயா்களை திருடியவரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குட... மேலும் பார்க்க

தாா் ஆலையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி உயிரிழப்பு: இழப்பீடு கோரி உறவினா்கள் சாலை மறியல்

வத்தலகுண்டு அருகேயுள்ள தாா் ஆலையில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் இழப்பீடு வழங்கக் கோரி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்... மேலும் பார்க்க