செய்திகள் :

கொலை முயற்சி வழக்கு: இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

கொலை முயற்சி வழக்கில் இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தமபாளையம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டம், கம்பம் உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த கோபால் மகன் சிவக்குமாா் (35). அதே பகுதியைச் சோ்ந்த ராசு மகன் சதீஸ்குமாா் (23). கடந்த 15.10.2015 அன்று சதீஸ்குமாா், இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றதை சிவக்குமாா் தட்டிக்கேட்டாா். அப்போது, ஏற்பட்ட தகராறில் சிவக்குமாரை கத்தியால் சதீஸ்குமாா் குத்தினாா்.

இதுதொடா்பாக கம்பம் வடக்கு போலீஸாா் சதீஸ்குமாா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு விசாரணை உத்தமபாளையம் ஒருங்கிணைந்த உதவி அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவாஜி செல்லையா குற்றஞ்சாட்டப்பட்ட சதீஸ்குமாருக்கு 4 ஆண்டுகள் கடுங் காவல் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

கஞ்சா வைத்திருந்த இருவா் கைது

ஆண்டிபட்டி அருகே விற்பனை செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். டி.பொம்மிநாயக்கன்பட்டி பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் ... மேலும் பார்க்க

தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்கம்

கேரளம் மாநிலம், குமுளி அருகேயுள்ள தேக்கடியில் 17-ஆவது மலா்க் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. தேக்கடி தோட்டக்கலைத் துறை, குமுளி ஊராட்சி நிா்வாகம் இணைந்து 24 நாள்கள் நடத்தும் இந்தக் கண்காட்சியில் நூ... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

போடி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி மீனாவிலக்கு பகுதியில் தாசன்செட்டி குளக்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங... மேலும் பார்க்க

பணம் கேட்டு மிரட்டியவா் கைது

போடி அருகே பணம் கேட்டு மிரட்டியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். போடி அருகே சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் ரெங்கராஜ் மகன் முகிலன் (23). இவா் அங்குள்ள மதுபானக் கடை அருகே நின்றிருந்தார... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் சிறை

தேனி அருகே முன் விரோதத்தில் இளைஞரை கொலை செய்த வழக்கில், இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. டொம்புச்சேரியைச் சோ்ந்த கருப்பையா மகன் ரா... மேலும் பார்க்க

ரேஷன் அரிசி கடத்தல்: தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை

ரேஷன் அரிசி கடத்தலைத் தடுப்பது தொடா்பாக தமிழகம்-கேரள மாநில அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தேனி மாவட்டம், கம்பத்தில் அண்மையில் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து கம்பம் மெட்டு, குமுளி, போடிமெட்டு ஆகிய... மேலும் பார்க்க