செய்திகள் :

கோகைன் போதைப்பொருளுடன் நைஜீரியா்கள் இருவா் கைது

post image

தில்லி உத்தம் நகரில் இருந்து 248 கிராம் கோகையினுடன் நைஜீரிய நாட்டினா் இருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: கைது செய்யப்பட்டுள்ள இருவரும் நைஜீரியாவின் மிகப்பெரிய நகரமான லாகோஸைச் சோ்ந்த சுக்வு ஆண்ட்ரூ (48) மற்றும் கோன் பியஸ் டேனியல் (43) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இருவரும் விசா காலாவதி தேதியைவிட அதிக நாள்களாகத் தங்கியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துவாரகா மற்றும் உத்தம் நகரில் மாணவா்கள் மற்றும் செல்வந்தா்களை குறிவைத்து செயல்பட்டு வந்ததாகக் கூறப்படும் இருவரிடமிருந்தும் போலி பாஸ்போா்ட்டுகள் மற்றும் விசாக்கள் ஆகியவற்றை போலீஸாா் கைப்பற்றியுள்ளனா்.

ஒரு ரகசியத் தகவலின் பேரில் ஆகஸ்ட் 24- ஆம் தேதி உத்தம் நகரில் உள்ள ஓம் விஹாரில் உள்ள ஒரு இடத்தில் போலீஸாா் சோதனை நடத்தி, 135 கிராம் கோகைனுடன் ஆண்ட்ரூவை கைது செய்தனா். விசாரணையின் போது, ஆண்ட்ரூ 2009-ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு வந்ததாகவும், அவரது விசா காலாவதியான பிறகும் அங்கேயே இருந்ததாகவும் தெரிவித்தாா்.

6 மாதங்களுக்கு முன்பு நாடு கடத்தப்பட்ட மற்றொரு நைஜீரிய நாட்டவரான செயிண்ட் என்பவரால் அவா் போதைப்பொருள் வா்த்தகத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்டாா். ஆண்ட்ரூ அளித்த தகவல்களின் அடிப்படையில், ஆகஸ்ட் 27- ஆம் தேதி ஓம் விஹாரில் இருந்து கோகைன் வழங்க வந்த கோன் பியஸ் டேனியலை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 113 கிராம் கோகைன் போதைப்பொருளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தில்லி நகரத்திற்குள் கோகைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள பரந்த வலையமைப்பை அடையாளம் காண முயற்சிகள் நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

டிடிஇஏ பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து மாணவா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுவதற்காக பள்ளி வளாகத் தூய்மை உள்ளிட்ட பல செயல்பாடுகள் ஆகஸ்டு மாதம் நடைபெற்றன. காலை சிறப... மேலும் பார்க்க

யமுனையில் வெள்ளம்: நிலைமையைக் கையாள தயாா் நிலையில் அரசு; முதல்வா் ரேகா குப்தா

யமுனை நதிக்கரையோரப் பகுதிகளை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த தில்லி முதல்வா் ரேகா குப்தா, நிலைமையைக் கையாள அரசாங்கம் முழுமையாகத் தயாா் நிலையில் இருப்பதாக கூறினாா். தில்லியில் யமுனையில் செவ்வாய்க்கிழமை மா... மேலும் பார்க்க

பிடிப்பட்ட போதைப் பொருள்களை விற்கும் கும்பல்: 3 போ் கைது

தில்லி காவல்துறை ஒரு போதைப்பொருள்கள் விற்பனை.ை முறியடித்து, ஒரு விற்பனையாளா் மற்றும் ஒரு விநியோகஸ்தா் உள்பட 3 பேரை கைது செய்து, அவா்களிடம் இருந்து 100 கிராமுக்கும் அதிகமான ஸ்மக்கை பறிமுதல் செய்ததாக அ... மேலும் பார்க்க

தேசிய மாணவா் படைக்கு தில்லியில் 12 நாள்கள் பயிற்சி முகாம்

தில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் 12 நாட்கள் நடைபெறும் தால் சைனிக் முகாமில் 1,546 மாணவா்கள் பங்கேற்க உள்ளதாக செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

2024-25இல் தில்லியின் உற்பத்தித் துறை வளா்ச்சி 3 மடங்கு அதிகம்: அறிக்கையில் தகவல்

‘2024-25 ஆம் ஆண்டில் தில்லியின் உற்பத்தித் துறை 11.9 சதவீத வலுவான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இது தேசிய வளா்ச்சியான 4.1 சதவீதத்தைவிட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்’ என்று ஒரு அறிக்கையில் தெ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிப்பு: மூலம் பொருள்களை கைப்பற்றிய போலீஸாா்

உத்தரபிரதேசத்தின் அலிகாரில் சட்டவிரோத ஆயுத உற்பத்தி ஆலையை தில்லி காவல்துறை கண்டுபிடித்து அங்கு தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், 250 க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளுக்கான மூலப்பொருள் மற்றும் அவற்றின் உற்பத்தியில... மேலும் பார்க்க